பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

167


இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழின் தொன்மை நன்கு அங்கைச் செங்கனிபோல விளங்கும். மேலும் தமிழ் தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல; மென்மையும், இளமையும், வளமையும், ஒண்மையும், நுண்மையும் உடைய ஒரு சீரிய செம்மொழியாகும். இதனுலன்றோ,

"ஆரியம்போல் உலகவழக்
       கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
       செயல்மறந்து வாழ்த்துதுமே"
  
"சது மறையா ரியம்வருமுன்
       சக முழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென
       மொழிகுவதும் வியப்பாமே !"

என்றார் பேராசிரியர் சுந்தரனார்.