இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழின் தொன்மையும் சிறப்பும்
167
இதுகாறும் கூறியவற்றிலிருந்து தமிழின் தொன்மை நன்கு அங்கைச் செங்கனிபோல விளங்கும். மேலும் தமிழ் தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல; மென்மையும், இளமையும், வளமையும், ஒண்மையும், நுண்மையும் உடைய ஒரு சீரிய செம்மொழியாகும். இதனுலன்றோ,
"ஆரியம்போல் உலகவழக்
கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே"
"சது மறையா ரியம்வருமுன்
சக முழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென
மொழிகுவதும் வியப்பாமே !"
என்றார் பேராசிரியர் சுந்தரனார்.