பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நாடும் மொழியும்

241


M. P. S. C. Provincial Services

21 சங்க காலத்தில் முத்தமிழ் வளர்ந்த வரலாற்றைக் கூறுக.
22 சமணர்கள் தமிழ் மொழிக்குச் செய்த சேவையைச் சுருக்கமாக எழுது.
23 தமிழ் நெடுங்கணக்கில் சீர்திருத்தம் செய்யப்படல் வேண்டும் என்பார் கொள்கையை ஆராய்க.
24 இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழி வளர்ந்துவரும் பான்மையை உதாரணத்துடன் விளக்குக
25 கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னே தமிழ்நாட்டுக்கும் அயல்நாடுகட்கும் இடையே நிகழ்ந்த கடல் வாணிகத்தைச் சான்று காட்டி எழுதுக.
26 தமிழகத்தில் கற்கோவில் எழுந்த வரலாற்றைக் கூறுக.
27 மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம் இவ்விரு நகரங்களின் பழம் பெருமையைச் சரித்திர வாயிலாக விளக்குக.
28 கி. பி. பத்தாம் நூற்ருண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் கலைக் களஞ்சியங்களாக விளங்கிய நகரங்களை ஆதாரத்துடன் குறிப்பிடுக.
29 பயிர்த்தொழிலை வளர்ப்பதற்குச் சேர சோழ பாண்டியர்கள் செய்த முயற்சியை விளக்கிக் கூறுக. [சூலை 1948]
30 நல்ல தமிழின் நீர்மையை விளக்கி உதாரணமும் தருக.
31 ’தமிழ்நாட்டு மூவேந்தருள்ளும் தமிழ் மொழியைச் சிறப்புற வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது" -இதை ஆராய்க.