பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தமிழ் நாடும் மொழியும்


இன்பம், அமைதி. அழகு இம்மூன்றும் தமிழ் நாடெங்கணும் களிநடம் புரிந்தன.

வாணிகம்

சங்ககாலத்தில் தமிழகம் மேனாடுகளுடனும், கீழ் நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு பெரிதும் கொண்டிருந்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டும். மேலும் பழைய ஏற்பாடும், செனகா, பெட்ரோனியசி, பிளினி, தாலமி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளும் ஆகியவற்றில் தமிழர் மேலை நாட்டாரோடு செய்த வாணிகத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. இதுமட்டுமா? ரோம நாணயங்கள் பல தமிழக மண்ணிற் கிடைத்துள்ளன. தோகை, மயில், அரிசி, இஞ்சி, முத்து ஆகிய சொற்கள் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன.

மேற்கே யவனமும் கிரேக்கமும் தமிழகத்தோடு வாணிகம் செய்தன; கிழக்கே தமிழகம் மலேயா, சீனா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தது. பாண்டிய நாட்டிலிருந்து முத்தும், சேர நாட்டிலிருந்து தந்தம், மிளகு, முதலியனவும், சோழ நாட்டிலிருந்து பட்டும் பிறவும், பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. வெளிநாடுகளிலிருந்து பாவை விளக்கு, மது வகைகள், தங்கம், குதிரை முதலியன தமிழகத்தில் வந்து குவிந்தன. யவன வீரர்கள் தமிழ் மன்னர்தம் காவலர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர். இவற்றைக் கீழ்வரும் வரிகள் நன்கு வலியுறுத்தும்.

'யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' (சிலம்பு)
“நீரின்வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்