பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

பிக்கப்பட்ட சுபாசுபக் கிரியைகளில் பிரதிவாதிகளெங்கும் எத்தேச கிராமங்களிலும் பிரதிவாதி வம்மிசத்தாரைப் பிரவேசிக்காமலிருக்கும்படியாயும் தீர்மானிக்க வேண்டுமென வும் கண்டிருக்கிறார்கள்."

பிரதிவாதிகள் கொடுத்த ஆன்ஸர்

பிராதில் கண்ட பிரம்மரிஷிகளுக்கும் வாதிகளுக்கும். யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், பிரம்மரிஷிகளு. டைய வம்சம் வாதிகளுடைய வம்சம் அல்லவென்றும், வாதிகள் பஞ்சமர் வம்சத்திற்குச் சமமானவரென்றும், ஆனதால் வேதோக்தமாய் உபாத்தியாயஞ் செய்யக் கூடாதென்றும், வாதிகள் செய்கிற தொழில் வெகு நிக்ருஷ்டமானதென்றும், தாங்கள் சுருதிப் பிரமாணமாயும் பிராமணாளென்பது திருஷ் டாந்தமாய் உலகத்திலுள்ள சமஸ்த வருணாசிரமத்தாருக்கும் தங்களைக் கொண்டே சகல கிரியைகளும் நடப்பித்துக் கொண்டு வரப்பட்டவர்கள். தாங்கள் இருக்கையில் வாதிகள் மாமூலுக்கு விரோதமாய்த் தாங்களேயென்று கலியான காரியங்கள் நடப்பிக்க யத்தனப் பட்டதேயின்றி தங்களால் நஷ்டம் சம்பவித்ததில்லையென்று கண்டிருக்கிறார்கள்.

வாதிகள் கொடுத்த ரிப்ளை

ஸாநகரிஷி, மனுப்பிரம்மரூபமும், ஸ்நாதனரிஷி மயப் பிரம்மருபமும், பிரத்னஸரிஷி சில்பிப் பிரம்மரூபமும், சுபர்ன ஸ்ரிஷி விஸ்வக்ஞப் பிரம்மரூபமும் இந்தப் பிரம்மரிஷிகளில் வகுத்துக் கொண்டவர்களின் வம்மிசத்தார்களாகிய தங்களுக்கு வேதோக்தமாய் மேற்கண்ட ரிஷிகளின் கோத்திரசாகை பிற வகைகளும் உண்டாயிருப்பதாகவும்,

வேதபிராமணப் பூர்வீகமாய் மனுப்பிரம்மாவிற்கு இரும்பு வேலையும் ரிக்வேத பாராயணமும் துவஷ்டப் பிரம்மாவுக்கு தாமிர வேலையும் சாமவேத பாராயணமும் விஸ்வக்ஞப் பிரம்மாவுக்கு சுவர்ண வேலையும் பிரணவவேத பாராயண மும் ஆகிய இந்தப் பஞ்சவித கன்மங்களை அனுஷ்டித்து விதிப் படி வருகிறதினாலே உலக சம்ரக்jணையாகி வருகிறதாகவும்,

தங்களுடைய அவுபாஸன ஒமகுண்டத்திற்கு தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலான பஞ்சலோகங்களையும் ரத்தினம் முதலான நவமணிகளையும் ஆகுதி கொடுத்து அதி னாலே சிருஷ்டிதிதி, சம்ஹாரம், திரோபாவம், அதுக்கிரக முதலானதற்கும் அஸ்திர ஆயுதங்களை உண்டாக்கவும் சென, ஆசன, அத்தி என அத்தியர் பதானதான பிரிதி சஷ்டி கர்மமும் சர்வதாபிமானமும் அரசுநிலை ஆக்கினாச்சுரமும் இஷ்டகாம்