பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

25

வாதிகள் சிருஷ்டி ஆதியிலேயே ஜனித்த பிரம்ம வம்சத்தாரென் பதற்கு யாதொரு ஞாயமும் காணப்படவில்லை.

5 பிரதிவாதிகள் சகல வருணாசிரமத்திற்கும் உயர்ந்த பிராம்மணர்களாயிருப்பார்களேயாகில் பிரம்ம சிருஷ்டிக்கு கொஞ்சம் சம்மதியாகிய சகலத்துக்கும் ஆதாரமான கர்மம் அவசியமாக இருக்க வேணும். அப்படிக்கொன்றுமில்லாமல் ஜோகி ஜங்கமரைப் போலே யாசித்து ஜீவனம் செய்யும்படி பரிச்சேதம் விதியிருக்கமாட்டாது.

6 வாதிகள் தஸ்தாவேசுகளாக தாக்கல் செய்திருக்கிற வேத சாஸ்திரங்களைப் பரிசோதனை செய்ததில் உபயவாதி கள் பாராயணஞ் செய்து கொண்டு வரப்பட்டவர்களாக விருந்தபோதைக்கும் அந்த வேதங்களில் ஒரு வரியாவது ஒரு அட்சரமாவது பிரதிவாதிகளுக்கும் அவர்கள் முன்னோர் களான முனிகளுக்கும் மற்றவர்களுக்கும் பாத்தியமுண்டா யிருப்பதாகக் காணப்படவில்லை. முன்னோர்களாகிய ரிஷி முனிகள் லோகப் பிரசித்தமாய் நீசச் சாதியில் பிறந்தவர் களாயிருக்கையில் அவர்களுடைய வம்சஸ்தர்களாகிய பிரதி வாதிகளை சர்வச் சிரேஷ்டர்களாக ஒப்புக் கொள்வது சாஸ்திர விசாரணையில்லாமையாயும் அறிவில்லாமையாயும் இருக்கிறது. ஆனால் முன்னாலே சில தேசங்களுக்குப் பாளையக்காரராக இருந்த அவிவேக துரைத்தனத்தாரையும் சில மூட ஜனங்களையும் எப்படியோ சூதடியினாலே மோசஞ் செய்து நாளது வரைக்கும் குரு ஆண்மை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மோசடிகளைக் கண்டுபிடித்து வருணாச்சிரம தருமங்களையறிந்து பரிபாலனஞ் செய்வது கனம்பொருந்திய கவர்மென்டு துரைத்தனத்தைச் சார்ந்த நீதியாயிருக்கிறது.

7 வாதிகள் பிராதிலும் ரிப்ளையிலும் சொல்லியிருக்கிற பஞ்சமுகப் பிரம்மாவின் சிருஷ்டி பரம்பரையினுடைய வம்சத் தார்களாகவும் உலக சம்ரக்ஷணைக்காக ஈஸ்வரனுடைய ஆக்கினையென்று சுருதி வாக்கியப்படிக்கு சமஸ்தத்துக்கும் ஆதாரமான பிரம கர்மமென்ற பஞ்சவித கர்மங்களை வாதிகள் செய்து கொண்டு வருவதனாலே உலக சம்ரக்ஷணையாகி வரு கிறதாக எசுர்வேத முதலானதும் முறையிட்டுக் கொண்டு வரு வதனால் ஈஸ்வர ரூபமாகிய ஆகாஸ் பூதமானது சகலத்திலும் வியாபித்திருக்கிறாப்போலே வாதிகள் செய்யப்பட்ட பஞ்ச கிர்த்தியங்கள் ஜகமுழுவதுக்கும் பீபிலிகாதி ஜந்துக்களுக்கும் ஆதாரமாய்ச் சர்வத்திர வியாபியாய் வியாபித்துக் கொண்டி ருப்பதால், வேத சம்மதியாய்ப் பிரயட்சமான பிராம்மண ரென்று நம்புதற்குப் போதுமான திருப்திகார முண்டாகிறது.