பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

33

விஷ்ணுவையும், இலக்குமியையும், தனது வலப்புறத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் தோன்றப் பண்ணினா னென்றும், மேற்படி புராணம் தானே வேறோரிடத்தில், பிரம்மா தனது சிருஷ்டிகிர்த்தியம் மந்தப்பட்டதினிமித்தம், விட்ட பெருமூச்சிலே பிறந்த ருத்திரன் அந்தத் தொழிலை நடப்பித்ததும் அது மீளவும் மந்தப்பட்டது கண்டு பிரம்மா அந்தத் தொழிலை மீண்டும் தானே நடப்பித் தானென்றும், மார்க்கண்டேய புராணத்தில், மகாலக் குமியிலிருந்து பிரம்மாவும் மாகாளியிலிருந்து ருத்திரனும், மகா சரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும் தோன்றினாரென்றும், வராக புராணத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரனென்ற மூவர்களிலும் ஒரு சக்தியுண்டாகி மூன்று பகுதி பட்டு லக்குமி-சரஸ்வதி-காளி என்பவர்களுண்டானார் களென்றும் சொல்லப் பட்டிருக்கிறது. மெய்யல்லவோ?

ஆமென்றால் கேளும் குண்டையரே! பாகவதம், மார்க்கண்டேயப் புராணம், வராகப் புராணம், நாராதீய புராணம், லிங்க புராணம் முதலான புராணங்களிலுள்ள பேதா பேதமான கட்டுக்கதைப் புராணங்களையெல்லாம் பொய்யென்று உமக்கும் மற்றவர்களுக்கும் விசதமாய் விளங்குதற்கு யாதொரு சந்தேகமில்லையல்லவா? இவ்வாறு கதைகள் மூலமாக உயர்வு தாழ்வு கற்பிப்பதை எதிர்ப்பதற்குப் புராண முரண்பாடுகளை எடுத்துக்காட்டி வன்மையாக அனைத்தும் பொய்யென்று நிரூபிக்கிறார்.

தாங்கள் மேலான குலமென்று காட்டக் குண்டையன் பிராமணர் வீட்டில் எல்லோருஞ் சாப்பிடுகிற உலக வழக்கைச் சான்றாகக் காட்டுகிறார்.

எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். உங்கள் வீட்டில் யாரும் சாப்பிடுவதில்லையே! என்று குண்டையன் கேட்கிறார். இதற்கு விடையாக மா. ச. ஆசாரியார் கூறுவதாவது:

பஞ்சாங்கக் குண்டையனே! விசாயன் முதலான விப்பிரர்களாகிய நீங்கள் பஞ்சம சாதியானமையில் பூர்வத்தில் யாவரும் உங்கள் வீட்டில் புசியாதிருப்பதைக் கண்டு வேத விசாரணையில்லாத துரைத்தனத்தாரைப் பிடித்து அவர்களைப் பல சூதடியினாலே மோசடி செய்து உங்கள் வசப்படுத்தி நீங்கள் மேலான சாதியென்றும் யந்திர தந்திர மந்திர ஜால வித்தையினால் யாவரும் பிரமிக்கும்படி பிரம்ம ரிஷிகள் என்று பகல் வேஷம் 36/3