உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

[பெண்பாற்

பழமாம். பன்னிருமுறைக்கும் கீழ்வருமாறு பாட்டுப் பாடப்படும்.

(1) ஒன்றாவது ஒன்றாங்காய்.
(2) இரண்டாவது இரத்தினக்கிளி (அல்லது ஈச்சங்காய்.)
(3) மூன்றாவது முத்துச்சரம்.
(4) நாலாவது நாற்காலி.
(5) அஞ்சாவது பஞ்சவர்ணம்.
(6) ஆறாவது பாலாறு.
(7) ஏழாவது எழுத்தாணி.
(8) எட்டாவது கொட்டாரம்.
(9) ஒன்பதாவது ஓலைப்பூ.
(10) பத்தாவது பனங்கொட்டை.
(11) பதினொன்றாவது தென்னம் பிள்ளை.
(12) தென்னைமரத் தடியிலே தேரோடும் பிள்ளையார்.

ஒருத்தி ஆடும்போது தவறிவிடின், அடுத்தவள் ஆடல் வேண்டும். ஆடினவள் மறுமுறையாடும்போது, மீண்டும் முதலிலிருந்தே ஆடல் வேண்டும்.

II. ஐந்தாங்கல் (ஒரு வகை)

ஆட்டின் பெயர் : ஐந்து கற்களைக்கொண்டு ஆடும் ஆட்டு ஐந்தாங்கல்.

ஆடு முறை : முந்தியாடுபவள், இந்த ஆட்டிற்குரிய ஐந்து கற்களையும் ஒருங்கே சிதறி, அவற்றுள் ஒன்றை எடுத்து மேலேபோட்டுக், கீழிருப்பவற்றுள் ஒன்றையெடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். பின்பு, கையிலிருப்பவற்றுள் ஒவ்வொன்றை மேலே போட்டுப்போட்டு, ஒவ்வொரு தடவையும் கீழிருப்பவற்றுள் ஒவ்வொன்றை யெடுத்துக்கொண்டு பிடித்தல் வேண்டும்.