பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்துக்கு முன் 101 1. எத்துணையோ பரிபாடல் 'பரிபாடல் என வெற்றெனக் கூறாமல், எத்துணையோ பரிபாடல் எனக் கூ றியிருப்பது, பல பரிபாடல்களின் தொகுப்பாகிய ஒரு தொகை நூலைக் குறிக்கிறது-என உய்த் துணரலாம். இந்த உய்த்துணர்வுக்குத் தக்க அகச்சான்று உள் ளது.இறையனார் அகப்பொருள் உரை கடைச்சங்க நூல்க ளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு நூல்களுள், "எழுபது பரிபாடல் என்னும் பெயரில் ஒரு நூல் சுட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த நூல் இப்போது கிடைக்கப் பெற்று நம் கையில் உலவி வருகின்ற பரிபாடல்' என்னும் தொகை நூலாகும். இஃது, பலர் பாடிய எழுபது பரிபாடல்களின் தொகுப்பு என்பது தெரிந்த முடிபு. கடைச்சங்க நூலாக "எழுபது பரிபாடல்’ என்பதைக் கூறியுள்ள உரையாசிரியர் , தலைச்சங்க நூலாக, எத்துணையோ பரிபாடல். என ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார் எனில், எழுபது பரிபாடல்களின் தொகுப் பாகிய கடைச்சங்கத் தொகை நூல் போலவே, கிடைக்கப் பெறாமையால் எண்ணிக்கை தெரிய முடியாத எத்துணையோ பரிபாடல்களின் தொகுப்பாகிய ஒரு பரிபாடல் தொகை நூல் தலைச்சங்க காலத்திலும் இருந்தது என்பது உய்த்துணரக் கிடக்கிறது. இதனைப் பெரும் பரிபாடல். எனப் பிற்காலத்துச் செய்யுள் ஒன்று கூறுகிறது. இப்படியொரு தொகை நூல் தலைச்சங்க காலத்தில் இருந் திருக்க முடியுமா என எவரும் ஐயுறாமல் இருப்பதற்காக, ஆண்டு இன்னும் சில கருத்துக்களைச் சொல்ல வேண்டும். பரிபாடல் என்பது பின்னர் வேறொரு தலைப்பின்கீழ் விரிவாக ஆராயப்படும் எனினும், தேவைக்கு ஏற்ற அளவு இங்கே சிறிது சுருக்கமாகப் பார்க்கலாம். பழைய பாடல் வகைகளுள் பரி பாடல் என்பதும் ஒன்று. குறள் பாக்களால் ஆன நூல் குறள்' (திருக்குறள்) என வழங்கப்படுவது போல, பரிபாடல்களால் ஆன நூல் பரிபாடல் நூல்என வழங்கப்படுகிறது. பரிபாடல் என்பது 'பரிபாட்டு’ எனவும் வழங்கப்பெறும். தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே பரிபாடல் என்னும் பாடல்வகை இருந்தது என்பதற்குத் தொல்காப்பியமே சான்று. "இலக்கியம்