பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் நூல் தொகுப்புக் கலை முதல் நூலாகிய பன்னிரு படலத்தின் பாங்கினைப் புரிந்து கொள்ளலாம். அது வருமாறு: புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறப் பொருள் செய்திகளை வெண்பாவால் விளக்குவதாகும்; இந் நூல் வெட்சிப் படலம், கரந்தை படலம், வஞ்சிப் படலம், காஞ்சிப் படலம், உழிஞைப் படலம், நொச்சிப் படலம்,தும்பைப் படலம், வாகைப் படலம்,பாடாண் படலம், பொதுவியல்படலம், கைக்கிளைப்படலம், பெருந்திணைப் படலம் என்னும் பன்னி ரண்டு படலங்களை உடையது. எனவே, இந்நூலைப் போலவே, இதன் முதல் நூலாகிய பன்னிரு படலமும், புறப்பொருள் பற்றிய பன்னிரண்டு படலங்களை உடையது என்பதும், அதனா லேயே பன்னிரு படலம்'எனப் பெயர் வழங்கப்பட்டது என்ப தும் விளங்கும். முதல் நூலாகிய பன்னிரு படலத்துள் உள்ள பன்னிரண்டு படலங்களைப் பார்த்தே, வழி நூலாகிய புறப் பொருள் வெண்பா மாலையும் பன்னிரண்டு படலங்களை அமைத்துக் கொண்டது என உணர்க. அடுத்து, புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளிலுள்ள, "துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்' என்னும் பகுதியைப் பார்க்கவேண்டும். அகத்தியரின் மாணாக் கர்களாகிய தொல்காப்பியர் முத்லிய புலவர்கள் பன்னிருவரும் சேர்ந்து செய்த நூல் பன்னிரு படலம் என இச்செய்யுள் கூறுகிறது. எனவே, பன்னிரு படலம் என்பது, பன்னிருவர் இயற்றிய பன்னிரு படலங்களின் தொகுப்பு நூல்-தொகை நூல் என்பது பெறப்படும்; பெறவே, ஒவ்வொருவரும் ஒவ் வொரு படலம் இயற்றிருக்கவேண்டும் என்பது தெளிவு. பன்னிரு படலத்தை இயற்றிய ஆசிரியர்கள் தொல்காப் பியர் முதலிய பன்னிருவர் எனவே, இந்நூல் இயற்றித் தொகுக்கப்பட்ட காலம், தொல்காப்பியத்தை ஒட்டிய இடைச் சங்க காலம் என்பது புலப்படும்.