பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 319 கன்கல ரீயும் நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடியாய் பகைவெம்மையினச்ையா ஆக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெங் தானையொடு மாறா மைந்தர் மாறுநிலை தேய மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானைமுழங்கும் இடாஅ வேனிகின் பாசறை யோனே.” இந்தப் பாடல் புறத்திரட்டில் தவிர வேறு எதிலும் காணப்படவில்லை. எனவே, தெரியாதிருந்த இந்தப் பதிற்றுப் பத்துப்பாடலைத் தெரிவித்த பெருமை புறத்திரட்டு ஒன்றுக்கே உரியது. மேற்காட்டிய இரு முழுப்பாடல் தவிர, இன்னொரு முழுப் பாடல் நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படுகிறது. தொல் காப்பியம் - புறத்திணையியலில், கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் என்று தொடங்கும் (12 - ஆம்) நூற்பாவின் உரையிடையே நச்சினார்க்கினியர் பின்வருமாறு ஒரு பகுதி வரைந்துள்ளார்:- - "உதாரணம் முற்காட்டியவே; வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்கரவம் முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க; அது, 'இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து கிலம்புடையூஉ வ்ெழுதரும் வலம்படு குஞ்சரம் எரியவிழ்ந் த்ன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செலல் இவுளி கோன்முனைக் கொடியினம் வரவா வல்லோ னோன்வினை கடுக்குங் தோன்றல பெரிதெழுங் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுங்தேர் கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக் கதத்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்பு நெடுமதில் கிரைஞாயிற்