பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ் நூல் தொகுப்புக் கலை மொழிகளிலும் காலச்சூழ்நிலைகட்கு ஏற்ப, உரிய மாறுதல்ட களுடன், பாடற்கலை படிப்படியாய் வளர்ச்சி பெற்று வந்திருக் கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. - பாடற்கலையின் பயன்கள்: | பொதுவாகக் கலைகளைக் கவின்கலை, பயன்கலை என இரண்டாகப் பிரித்து கூறுவது வழக்கம். ஒவியம், சிற்பம் முதலியன கவின் கலை - அதாவது - அழகுக் கலைகளாம். அவற்றால் வாழ்க்கைக்கு நேரடிப் பயன் பெரும்பாலும் இல்லை; அழகைப் பார்த்துச் சுவைத்து மகிழ்வதோடு சரி. கணிதக்கலை, மருத்துவக்கலை முதலியன வாழ்க்கைக்கு நேரடிப் பயன் அளிக்கும் பயன் கலைகளாகும். அழகைக் கண்டு சுவைக்கும் இன்பக் கூறுகள் அவற்றில் இல்லை. ஆனால் பாடற்கலையோ, கவின் கலையுமாகும் - பயன்கலையுமாகும். பாடற்கலையிலுள்ள கவின் கலைக் கூறுகளை முதலிற் காண்பாம்: பாடலைப் பாடுவதாலும் கேட்பதாலும் ஒருவகைப் பொழுதுபோக்கு இன்பச்சுவை உள்ளது. பாடலின் இசையால் செவிக்கு இன்பம்; பொருள் நயத்தால் கருத்துக்கு இன்பம்; சொல்நயத்தால் செவிக்கும் கருத்துக்கும் ஒருசேர இன்பம். பொதுவாக பாடலின்பம், அலுப்பு-களைப்பைப் போக்கி ஒய்வு நேரப்பொழுது போக்கிற்கு உதவுகிறது. அடுத்துப் பாடற் கலையிலுள்ள பயன்கலைக் கூறுகளைப் பார்ப்போம்: பாடல்களிலுள்ள கருத்துக்கள் அகக்கண்ணைத் திறக்கின்றன: உள்ளுணர்வையும் மனவெழுச்சியையும் தூண்டி நன்முறையில் தொழிற்படுத்துகின்றன; இவ்வாறு ஒழுகவேண் டும், இவ்வாறு ஒழுகலாகாது என்றெல்லாம் அறிவுரை தரு கின்றன. வாழ்க்கைக்கு நல்ல குறிக்கோளை வகுத்துக் கொடுக் கின்றன; உள்ளத்தைப் பண்படுத்தி நல்லொழுக்க வழியில் திருப்பிவிடுகின்றன; கற்பனை நயத்தில் ஆழச்செய்து கவலையை மறக்கச் செய்கின்றன; கடந்தகால நடைமுறை களையும் வரலாறுகளையும் அறிவித்து, இனி எதிர்காலத்தில் திட்டமிட்டு நல்வாழ்வு வாழ வகை செய்கின்றன.