பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 தமிழ் நூல் தொகுப்புக் கலை கிற்று, முதல் பாடலுக்கும் இருபத்திரண்டாம் பாடலுக்கும் இசை தெரியாது. இரண்டு முதல் பன்னிரண்டு வரையான பாடல்கள் பண்ணுப் பாலையாழ்' என்னும் இசையமைந்தவை. பதின் மூன்று முதல் பதினேழு வரையும் 'பண் நோதிறம்’ என் னும் இசையுடையவை. பதினெட்டு முதல் இருபத்தொன்று வரை, காந்தாரம்' என்னும் பண்ணிசை பெற்றனவாகும். இந்த அமைப்பை நோக்குங்கால், இந்நூற் பாடல்கள் இசை வாரியாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்ட பேருண்மை நன்கு புலனாகலாம். அந்தக் காலத்தில் பரிபாடல் பண் ணமைத்துப் பாடப்பட்டது என்னும் செய்தியும் இதனால் விளங்குகிறது. பரிபாடல் அமைப்பின் மாதிரிக்காக, செவ் வேளைப் பற்றிய ஐந்தாம் பாடலின் இறுதியில் உள்ள பகுதி வருமாறு: கடவுள் வாழ்த்து கடுவனிள வெயினனார் பாட்டு கண்ண னாகனார் இசை பண்ணுப் பாலைப் யாழ் மேலுள்ளவாறு ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் உரிய விவரங்கள் இருக்கக் காணலாம். இவ்வாறு பாடலாசிரியர் பெயர். இசையாசிரியர் பெயர், பண் பெயர் எல்லாம் தந்து நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர் மிகவும் பாராட்டத் தக்கவர். ஒவ்வொரு தொகைநூலின் இறுதியிலும் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பரிபாடல் ஒலைச்சுவடி முழுதும் கிடைக்காமை யால், தொகுத்தவரையும் தொகுப்பித்தவரையும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமற் போயிற்று. பாடல்களே ஏழில் ஐந்து பங்கு கிடைக்காதபோது. தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் கிடைக்காததில் வியப்பில்லை. பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்கள் வரையும் நோக்குங் கால், கேசவனார் என்னும் புலவர்மட்டும் தமது (14-ஆம்) பாடலுக்குத் தாமே இசையமைத்துள்ளார் என்பதும், மற்றவர் பாடலுக்கு வேறு பிறர் இசையமைத்துள்ளனர் என்பதும் புலனாகும். ஒவ்வொரு பாடலாசிரியரும் தத்தம் பாடலுக்கு