பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு - '563 முதல்பாகம்-தேசீயகீதங்கள்; 1. பாரதநாடு, 2. தமிழ்நாடு 3.சுதந்த ரம், 4.தேசீய இயக்கப் பாடல்கள், 5. தேசீயத் தலை வர்கள், 6.பிறநாடுகள். இரண்டாம் பாகம்-தெய்வப் பாடல்கள்: 1. தோத்திரப் பாடல்கள், 2.ஞானப் பாடல்கள், - மூன்றாம் பாகம்-பல்வகைப் பாடல்கள்:1.நீதி, 2.சமூகம், 3.தனிப் பாடல்கள், 4.சான்றோர், 5.சுய சரிதை, 6.வசன கவிதை. நான்காம் பாகம்-முப்பெரும் பாடல்கள்: 1.கண்ணன் பாட்டு, 2.பாஞ்சாலி சபதம், 3.குயில் பாட்டு. புதிதாகச் சேர்க்கப் பெற்றவை: 1.உயிர் பெற்ற தமிழர் பாட்டு, 2.இளசை ஒருபா ஒருப.து. இறுதியில் அநுபந்தங்கள். ஆக, இந்தத் தொகுப்பு பாரதியார் பாடல்களின் முழு உருவம் என்பதாகக் கருதப்படுகிறது. சுதேச கிதங்கள் பாரதி பிரசுராலய வெளியீடு, சென்னை. முதல் பாகம்: வந்தே மாதரம் முதல் பொய்யோ மெய்யோ’ என்னும் தலைப்பு வரை. இரண்டாம் பாகம்: பல தலைப்புகளில் பாடல்கள் உள் ளன. எனக்குக் கிடைத்த நூலில் முதல் 128 பக்கங்கள் இல்லை. பாரதியார் இன் கவித்திரட்டு தொகுப்பு: சாகித்திய அகாடமிக்காக, ரா.பி.சேதுப் பிள்ளை தொகுத்தது. வெளியீடு: பழநியப்பா பிரதர்ஸ் சென்னை. அச்சு: ஏஷியன் பிரின்டர்ஸ், சென்னை - 5 காலம்: 1 – 3 – 1957. உள்ளுற்ை: பாரத நாடு, தமிழ்நாடு, சுதந்திரம், தேசிய இயக்கம், தேசீயத் தலைவர்கள் பிற நாடுகள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள், நீதி, சமூகம், தனிப் பாடல் கள், சிான்றோர், சுய சரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு - ஆகியவற்றின் தொகுப்பு.