பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 தமிழ் நூல் தொகுப்புக்கலை 1. கருத்து, 2. இலக்கியம், 3. கலை, 4. வாழ்க்கை, 5: கடமை, 6. திருத்தம், 7. நாகரிகம், 8. வரலாறு, 9. மதம், 10. இன்பம். பாடல்கள் எடுக்கப்பட்ட நூல்களாவன: தொல்காப்பியம் பத்துப் பாட்டு-பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை. எட்டுத் தொகை-எட்டு நூல்களும். . பதினெண் கீழ்க்கணக்கு-களவழி' நாற்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைம்ாலை நூற் றைம்பது. - - - காரைக்கால் அம்மையார் புராண மூலமும் அரும் பொருள் உவமைச் செய்யுள் திரட்டும் இது, காரைக்கால் அம்மையார் புராணம் என்னும் பெயரில் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ள பகுதியும், அதன் விளக்க உரையில் மேற்கோள்களாகப் பல நூல்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள பாடல்களின் திரட்டும் கொண்ட ஒரு தொகுப்பாகும். இந்நூலின் முதல் பக்கத்தில் உள்ள (Title page) செய்தி அதிலுள்ளவாறு அப்படியே வருமாறு: 'இவை காரைக்கால் குவெர்னமா பாடசாலை திரெக்தேரும், ஒபிசியெ தக்கா தெமியுமாகிய, தம்பி-புருஷோத்தம்ப் பிள்ளையவர்களால் தொகுக்கப்பட்டு சென்னை ஆனந்தா அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. 1960” இதுவரையிலும் உள்ளதற்கு உரிய விளக்கமாவது: குவெர்னமா என்னும் பிரெஞ்சுச் சொல்லுக்குக் கவர் மென்ட் (Government) – og ærësh என்பது பொருள். திரேக்தேர் (Directeur) என்னும் பிரெஞ்சுச் சொல்லுக்கு (Director) இயக்குநர் என்பது பொருள். எனவே, இதைத் தொகுத்தவர், காரைக்காலில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில்