பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழ் நூல் தொகுப்புக் ఇడి இங்ங்னம் கொள்ளாமல், - ஒத்து என்பதும் படலம் என்பதும் ஒன்றுதான்: படலம் என்பது பெரும் பிரிவு எனவும் ஒத்து என்பது உட்பிரிவு எனவும் கொள்ள முடியாது; எனவே, 'கரண ஒத்து என்பது பதினறு படலங்களுள் ஒரு படலத்தையே குறிக்கும் - எனவும் கூறுவதற்கு இடமுண்டு. 'ஒத்தினுல் பிண்டமாயிற்று ானிரு படலம்’ (தொல் - பொருள் - செய்யுளியல் - 165கி உரை) என இளம்பூரணர் கூறியிருப்பது (இது முன்னரே எடுத்துக் காட்டப் பெற் றுள்ளது).ஈண்டு ஒப்பு நோக்க வேண்டியதாகும். எனவே, இளம்பூரணரின் கருத்துப்படி, பன்னிரு படலம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு படலத்தையும் ஒத்து’ என்னும் பெயரால் குறிப்பிட முடிவது போலவே, பதினறு படலம் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு படலத்தையுங் கூட ஒத்து’ என்னும் பெயரால் குறிப்பிட முடியும் என்பது தெளிவு. தொகை நூல் பதினறு படலம் என்னும் நூல் பதினறு சிறு பிரிவுகள் மட்டும் உடையது என்ருே அல்லது - பதிருது பெரும் பிரிவுகளும் அவற்றுள் பல உட்பிரிவுகளும் உடையது என்ருே - எவ்வாறு கூறப்படினும் கவலையில்லை; ஆல்ை, இந்த நூலில் பல்வேறு வகைப்பட்ட பதினறு படலங்கள் உள்ளன என்பது வெளிப்படை. அங்ங்னமெனில் பலரால் செய்யப் பெற்ற படலங்களின் தொகுப்பாகிய பன்னிரு படலம் என்னும் தொகை நூலைப் போலவே, பதினறு படலம் என்னும் நூலும் பலரால் செய்யப் பெற்ற படலங்களின் தொகுப்பாகிய ஒரு தொகை நூலாக இருக்கலாம் அன்ருே? பன்னிரு படலம் பன்னிருவரால் செய்யப்பட்டிருப்பது போல, பதினறு படலம் பதினறுவரால் (பதினறு பேரால்) செய்யப்பட்டிருக்கலாமே! * பன்னிரு படலம் பன்னிருவரால் செய்யப் பெருமல் ஒருவரால் செய்யப் பெற்றிருப்பின், பன்னிரு படலம் எனப் பெயர் பெருமல் புறத்திணைப் படலம் என்ருே அல்லது ஆசிரியர் ப்ெபர்ாவேர் வழங்கப் பெற்றிருக்கும். அதேபோல, பதினறு படலம் ::igi பதினறு படலம் என்னும் நூலும் பலரால் இன்றி,ஒரே ஆஸ் ரால் செய்யப் பெற்றிருப்பின், பதினறு படலம் எனப் பெயர் வழங்கப் பெருமல், இசைத்துறைப் பெயராலேர்' அல்லத் ஆசிரியர் பெயராலோ வழங்கப் பெற்றிருக்கும். அங்ங்ணம் இன்றிப் பலரால் செய்யப்பட்ட தொகுப்பாய் இருந்தம்ை யால்தான், பலரால் பாடப்பட்ட பத்துப்பாட்டு’ r என்னும் தொகுப்புப் போல, பதினறு படலம் என வழங்கப் பட்டது. எனவே, இந்நூல் ஓர் இசைத்'தமிழ்த் த்ொதை .நூல் என்பது புலனாகும். , | .مد. م இலப்பதிகார அரும்பத வுரையாசிரியர், வெற்றுபடி காகப் பதினறு படலத்துள்’ எனக் கூருமல் இசைத்தமிழ்ப் பதினறு படலத்துள்’ எனக் கூறியிருப்பதால், இயல்தமிழ்ப் பதினறு படலம் என ஒன்ருே அல்லது -நாடகத்தமிழ்ப் பதினறு படலம் என ஒன்ருே இருக்கலாம், போலும் என்ற ஆயம் எழலாம். ஆல்ை, இப்படியொன்றும் இருந்திராது. இந்த நூலுக்கு முன்பே பன்னிரு படலம்’ என்னும் இயல் தமிழ் நூல் இருந்ததாலும், பன்னிரு படலத்தின் பிரிவுகள் கைக்கிளைப் படலம், பெருந்திணைப் படலம் என்றெல்லாம் தனித்தனியே வழங்கப்பட்டு வந்ததாலும், இன்னும் படலம் என்று முடியும் பெயரால் வேறு நூல்களும் இருந்திருக்கலா மாதலாலும். ஏந்தப் படலம் என்னும் குழப்பத்தினின்றும் வேறு பிரித்துத் தெளிவுறுத்தவே, அரும்பத வுரையாசிரியர் "இசைத் தமிழ்ப் பதினறு படலம்’ எனக் கூறியிருக்கலாம்: செஞ்ஞாயிறு என்பதால் வெள்ளை ஞாயிறு ஒன்று. இருப்பதாக -வும், வெண்டிங்கள் என்பதால் சிவப்புத் திங்கள் என ஒன்று இருப்பதாகவும் பொருள் இல்லை: செஞ்ஞாயிற்றை நோக்க வெண்டிங்கள் எனவும் வெண்டிங்களை நோக்கச் செஞ்ஞாயிறு எனவும் வழங்கினர். இதுபோன்றதே "இசைத்தமிழ்ப் பதினறு படலம்' என்பதுமாகும். எது எப்படியிருந்த போதிலும். இசைத் தமிழ் பற்றிய பலர் இயற்றிய ப்டலங்களின் தொகுப்பு நூல் பதின ற படலம் என்ற முடிவுக்கு நாம்: வரமுடியும. s” - వ్రైఫ్ -ميو " نة ميام *** يوم