பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 தமிழ் நூல் தொகுப்புக் க.ை முழு உருவத்தில் இருந்த பதிற்றுப் பத்திலிருந்து இரு பத்துக்கள் பிற்காலத்தில் காணுமற்போனது எவ்வாறு? இதற்குத் தக்க விடை கூற முடியும். பழைய தமிழ் நூல்களுள் இப்பொழுது கிடைத் திருப்பன சிலவே; அழிந்து போனவையே மிகப் பல. பவ நூல்களின் பெயர்கள் மட்டும் இப்போது அறியப்படுகின்றன. நூல்கள் கிடைக்கவில்லை. சில நூல்களில் தப்பித் தவறிச் சில பகுதிகன் மட்டும் கிடைத்துள்ளன. இதற்குக் காரணம் என்ன? பழைய ஓலைச்சுவடிகள் பலவும் இயற்கையாகவும் அழிந்தன-வேண்டும் என்றே திட்டமிட்டும் அழிக்கப் பட்டன. இந்த இருமுறைகளில் ஏதோ ஒரு முறையில், பதிற்றுப் பத்தும் அழிந்து போயிற்று - அல்லது - அழிக்கப் பட்டு விட்டது. ஏசுநாதர் மீண்டும் உயிர்த்தெழுந்ததைப் போல, எங்கோ ஒளிந்து கொண்டிருந்த ஒரே ஒரு சுவடி மட்டும் பின்பொருநாள் தலைகாட்டியது. இந்தச் சுவடியில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இழக்கப்பட்டிருந்தன. இந்தச் சுவடியைப் பார்த்தே பின்னர்ப் பல படிகள் பலராலும் எடுத்துக்கொள்ளப் பட்டன. இவ்வாறு முதலும் கடையும் குறைந்த உருவத்தில் பதிற்றுப் பத்து மீண்டும் பரவத் தொடங்கியது. இப்பொழுது கிடைத்துள்ள ஒலைச் சுவடிப் படிகளிலெல்லாம் முதலும் இறுதியும் இல்லாது போனதன் காரணம் இப்போது ஒருவாறு விளங்கலாம். சரி, - மீண்டும் உயிர்த்தெழுந்ததாகக் கூறப்பட்ட ஒரே ஒர் ஒலைச் சுவடியில் முதலும் கடையும் கு ைற ந் த து எவ்வாறு? பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்தும் தனித்தனியாகக் கட்டப்பட்டுப் பின் இணைத்து வைக்கப்பட்டிருந்திருக்கும் என முன்பே கூறினேம். இந்தப் பதிற்றுப் பத்துச் சுவடி மற்ற நூல்சுவடிகளின் இடையே வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், பதிற்றுப்பத்துச் சுவடியின் முன்னல் வைக்கப் பட்டிருந்த வேறு நூல் சுவடியுடன் பதிற்றுப்பத்தின் முதல் பத்து கலந்து விட்டிருக்கும்; பதிற்றுப் பத்துச் சுவடியின் பதிற்றுப் பத்து 343 பின்னல் வைக்கப் பட்டிருந்த வேறு நூல் சுவடியுடன் பதிற்றுப் பத்தின் இறுதிப் பத்து கலந்து விட்டிருக்கும். இச் சுவடிகளைக் கையாண்டு படித்தவர் இறந்து போக, அவரின் வழித்தோன்றல்கள் இவற்றைப் பற்றி ஒன்றும் அறிய மாட்டாமையால், இவ்வாறு முதல்பத்தும் இறுதிப் பத்தும் வேறு நூல் சுவடிகளுடன் தவறுதலாகக் கலக்க விட்டிருக்கலாம்; அல்லது வேறு விதமாகவும் நேர்ந்திருக் கலாம்; அஃதாவது: "முதலும் இறுதியும் சிதைவது இயற்கை என்னும் பொது முறைப்படி, பதிற்றுப் பத்துச் சுவடியைக் கையாண்டு படித்து வந்தவர்களால் முதல் பத்தும் இறுதிப் பத்தும் சிதைந்த நிலையில் இருக்க, பின் வந்தவர்கள் அவற்றைப் பற்றி ஒன்றும் அறியாராதலின், சிதைந்த நிலையிலிருந்த அந்த இரு பத்துக்களையும் எடுத்து எறிந்து விட்டு, இடை யிலே நல்ல நிலையில் இருந்த எட்டுப் பத்துக்களை மட்டும் எடுத்துத் தனியே கட்டி வைத்திருக்கலாம். இப்படியாக ஏதோ ஒரு வகையில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இழக்கப்பட்டு விட, இடையிலே உள்ள எட்டுப் பத்துக்கள் மட்டும், பதிற்றுப் பத்து" என்னும் உருவத்தில் உயிர்த் திருந்தன. பதிற்றுப் பத்தின் ஒலைச் சுவடிப் படிகள் எல்லாம் அழிந்து போக - அல்லது - அழிக்கப்பட்டு விட, ஒரே ஒர் ஒலைச் சுவடிப் படி மட்டும் உயிர்த்தெழுந்திருந்த தாக முன்பு கூறிளுேமே, அந்தப் படி தான் இப்படி. எட்டுப் பத்துக்களோடு நின்றுவிட்ட படியாகும். அந்தப் படியைப் பார்த்துப் பின்னர்ப் பல படிகள் எடுக்கப்பட்டன. பதிற்றுப் பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் மறைந்த மாய வரலாறு இவ்வாருகத்தான் இருக்கக் கூடும். பதிற்றுப் பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இழக்கப் பட்டன வெனில், நூல் பெயர் எவ்வாறு தெரிய வந்தது? முதல் பத்தின் முகப்பில், பதிற்றுப் பத்து' என நாற்பெயர் எழுதப் பட்டிருக்கும்; இறுதிப் பத்தின் இறுதி யிலும் பதிற்றுப் பத்து முற்றும் என நூற்பெயர் குறிப்