பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H6 தமிழ் நூல் தொகுப்புக் க.ை ஒன்று ஒன்ருகவா ? ஒரே மட்டாகவா ? ஒன்று ஒன்ரு நூாரு? ஒரே மட்டா நூரு?" என்பது ஒரு பழமொழி. ஒர்ேயடியாகச் சேர்ந்த பின்னரே நூறு தேற முடியும். ஈண்டு, தொகை நூல்கள் முந்தியவையா? முழு. முழுத் தனி நூல்கள் முந்தியவையா?- என்றதோர் ஐயம் எழுகிறது. "சிலப்பதிகாரம்’ என்னும் நூல் ஒருவரே ஒரே பொருள் பற்றிய எழுதிய ஒரு “p@p % தனிநூல். புறநானுாறு: என்னும் நூல், பலர் பலகாலத்தில் பலபொருள் பற்றி எழுதிய பல்வேறு பாடல்களின் - அஃதாவது - நானுாறு உதிரிப் பாடல்களின் தொகுப்பு நூல் - தொகை நூல் ஆகும். புறநானூறு போன்ற தொகைநூற் பாடல்கள் முதலில் தோன்றியிருக்க முடியுமா? சிலப்பதிகாரம் போன்ற முழுத் தனிநூல் முதலில் தோன்றியிருக்க முடியுமா? இந்தக் கேள்வியையே இன்னெரு விதமாகவும் கேட்கலாம். அஃதாவது, - உதிரிப் பாடல்கள் முதலில் தோன்றினவா? முழுத் தனி பாடல்கள் முதலில் தோன்றினவா? இந்த வினவுக்கு விடையிறுப்பது எளிது. தொகை நூற். பாடல்களே - அதாவது - உதிரிப் பாடல்களே முதலில் தோன்றியவையாகும். பின்னரே முழுத் தனி நூல்கள் தோன்றின. தொகை நூல்களிலேயே இருவகை உண்டு. அவையாவன :- "புறநானூறு' என்னும் நூலைப் போல, பாவலர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஒருவகை. சுப்பிரமணிய பாரதியார் என்பவர் பல சமயம் பாடிய பல்வேறு வகைப் பாடல்களின் தொகுப்பாகிய 'பாரதியார் பாடல்கள் (பாரதியார் கவிதைகள்) என்னும் நூலைப்போல, ஒருவரே பல நேரத்தில் பல பொருள்கள் பற்றிப் பாடிய பல்வேறு வகைப் பாடல்களின் தொகுப்பு நூல் மற்ருெரு வகையாகும். இவ்விருவகைத் தொகை நூற்களுள், பலர் பாடல்களின் தொகுப்பு நூலே முதலில் தோன்றியிருக்க முடியும். ஒருவர் பாடல்களின் தொகுப்பு நூல் பின்னரே தோன்றியிருக்க வேண்டும் இயற்கை வழி இதனைத் தீர்மானிப்போம் : நூல் தொகுப்புக் கலை 17 மிகவும் பழைய காலத்தில், ஒருவரே பல பாடல்கள் இயற்றுவது என்பது அருமை. அவரவரும் ஏதேதோ ஒன் றிரண்டு அல்லது இன்னும் சிறிது கூடுதலாகப் பாடல் இயற்றுவதே இயற்கை. இப்படியாகப் பலர் பாடிய பல பாடல்களையும் மக்கள் கேட்டும் பாடியும் சுவைத்து மகிழ்ந் திருப்பர்; பின்னர் அவற்றைத் தொகுத்து எழுதியும் வைத்துக் கொண்டிருப்பர். இதற்கு அடுத்த கட்டமாகவே, ஒருவர் பல பாடல்கள் எழுதுவது நிகழ்ந்திருக்கும். அந்த ஒருவரும் முதலில் ஒரு பொருள் பற்றித் தொடர்ந்து ஒரு முழுத் தனிநூல் எழுதியிருக்க முடியாது; அவர் அவ்வப் போது பல பொருள் பற்றித் தனித்தனிப் பாடல்களே எழுதியிருக்கக் கூடும்; இந்தத் துறையில் திறமை பெருகப் பெருக, பின்னரே ஒரு பொருள் பற்றித் தொடர்ந்து ஒரு முழுத் தனிநூல் எழுதியிருக்க முடியும். இன்றுள்ள பாவலர் ஒருவரையே எடுத்துக் கொள்வோம் :- அவர் முதலில் பலர் எழுதிய பாடல்களே - பல இலக்கியங்களைப் படித்துப் :ப்போது பல்வேறு பொருள்கள் பற்றித் தனித்தனிப் பாடல்கள் எழுதிப் பழகு கிருர்; இந்தக் கலை கைவந்தபின்னர் முழுத் தனிநூல் எழுது வதில் முனைந்து விடுகிருர். இதுதான் இயற்கை. இந்த நிலை அன்றைக்கும்,பொருந்தும் - இனி என்றைக்கும் பொருந்தும். - سساس مسگ گ

வ - ماه سس - هلاگ ، سس ما فنجيجي هو பயிற்சி பெறுகிருச் * ! : 2: డా: : : ; شی گثت پنیتی
  • .*, * - & ,• n ¢ : حجم o AY یہ ہر .;ہ- . ; மற்றும், இந்த இயற்கை நியதி எந்த மொழிக்கும் பொருந்தும்.

சில மொழிகளில் கிடைத்திருக்கும் நூல்களுள், தொகை நூல்கள் பிற்பட்டனவாயும் முழுத் தனிநூல்கள் முற்பட்டன வாயும் உள்ளனவே யெனில், அம்மொழிகளில், உதிரிப் பாடல்கள் முன்னமேயே தொகுக்கப்படாமல் மறைந்து போயிருக்கக் கூடும் - அல்லது - தொகுத்த தொகை நூல்கள் மறைந்து போயிருக்கலாம் - அல்லது - முழுத் தனி யொரு நூலுக்கு முன்னல் தோன்றிய உதிரித் தனிப் பாடல்கள், அந்த முழுத் தனிநூல் தோன்றிய பிறகு தொகுக் கப்பட்டுப் பிந்தியதுபோல் தோன்றலாம். எனவே, எந்தக் கோணத்தில் நின்று நோக்கினும், தொகைநூற் பாடல்களே 2