பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழ்மொழியில் நூல்தொகுப்புக் கலை நூல் தொகுப்புக் கலை - முற்கூறிய உலகப் பழம் பெரு மொழிகளைப் போலவே தொன்மைச் சிறப்பும் உயர்தனிச் செம்மையும் உடைய தமிழ் மொழியிலும் அன்றுதொட்டு இன்றுவரை தொகை நூல்கள் தோன்றிப் பெருகி வருகின்றன. தமிழ் து.ால் தொகுப்புக்கலை (Tamil Anthology) ustaseqh Gergő, il 1 உடையது: தரத்தாலும் அ ள வா லு ம் பரந்துபட்ட வளமுடையது; பன்னிரண்டாம் நூற்ருண்டிலேயே நூல் தொகுப்புக் கலைக்கு இலக்கணம் கூறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. ஆம்: பன்னிரண்டாம் நூற்ருண்டில் இயதற்றப்பட்ட தாகக் கூறப்படும் தண்டியலங்காரம்' என்னும். செய்யுள் அணியிலக்கணத் தமிழ் நூலில், செய்யுள் ெ தாகுப்புக்கலைக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: "தொகை கிலச் செய்யுள் தோன்றக் கூறின் ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்க்தவும் பொருள் இடம் காலம் தொழில் என நான்கினும் பாட்டினும் அளவிலும் கூட்டிய வாகும்’ என்பது தண்டியலங்காரம்-பொதுவணியியல் (5) நூற்பா. தண்டியலங்காரத்திற்குப் பழைய உரை ஒன்றுள்ளது. உரையாசிரியர் பெயர் சரிவரத் தெரியவில்லை. இந்த நூற்பா வுக்கு உரிய அந்தப் பழைய உரைப்பகுதி வருமாறு: "(இதன் பொருள்) தொகைநிலைச் செய்யுள் என்பதனை 86.5ಕಿ. சொல்லின், ஒருவரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும், பலரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவுமாய், அவை பொருளால் தொகுத்த பெயர் பெற்றனவும், இடத்தால் தொகுத்த பெயர் பெற்ற, தமிழ் மொழியில் நூல்தொகுப்புக் கலை 85 னவும், காலத்தால் தொகுத்த பெயர் பெற்றனவும், தொழிலால் தொகுத்த பெயர் பெற்றனவும், பாட்டால் தொகுத்த பெயர் பெற்றனவும், அளவால் தொகுத்த பெயர் பெற்றனவும் (என்றவாறு) அவற்றுள், ஒருவரால் உரைக்கப்பட்டத-திரு வள்ளுவப் பயன்: பலரால் உரைக்கப்பட்டது - நெடுந்தொகை. இஃது எல்லாத் தொகைக்கும் பொதுவிலக்கணம். பொருளால் தொகுத்தது - புறநானூறு. இடத்தால் தொகுத்தது - களவழி நாற்பது. காலத்தால் தொகுத்தது - கார் நாற்பது. தொழிலால் தொகுத்தது-ஐந்திணை. பாட்டால் தொகுத்ததுகலித்தொகை. அளவால் தொகுத்தது - குறுந்தொகை. இவை சிறப்பிலக்கணம். "கூட்டிய' என்ற விதப்பான், இவ் வறுவகையானு மன்றிப் பிறவற்ருற் பெயர் பெற்று வருவனவு முளவேல், அவையுங் கொள்க-’’ - மேலுள்ள நூற்பாவாலும், பழைய உரைப் பகுதி யாலும் அறிய வேண்டுவன பல உள; அவை வருமாறு:(1) பலர் பாடல்களின் தொகுப்பே தொகைநூல்' எனப்படும் என்பதென்றில்லை; ஒருவர் பாடிய பாடல்களின் தொகுப்பும் தொகைநூல் எனப்படும் என்னும் செய்தி அறியப்படுகிறது. ஆனால், ஒருவர் பாடிய பாடல்கள், ஒன்ருேடொன்று தொடர்பின்றித் தனித்தனிக் கருத்து உடையதாக இருக்க வேண்டும். ஒன்ருே டொன்று தொடர்பு கொண்டிருக்குமாயின், அத்தகைய நூல் தொகைநிலை என்று சொல்லப்படாமல், தொடர்நிலை' என்று பெயர் பெறும்என்று தண்டியலங்காரம் அடுத்த நூற்பாக்களில் அறிவித் துள்ளது. ஈண்டு, இராமலிங்கத் தம்பிரான் அவர்களால் எழுதப் பட்டுள்ள குறிப்புரையில், தொகை நிலைச் செய்யு வளாவது-ஒரு செய்யுளோடு மற்ருெரு செய்யுளுக்குத் தொடர்பு யாதுமின்றித் தனித்தனியே ஒரு பொருள் உணர்த்துஞ் செய்யுள்கள் பல தொகுக்கப்பட்ட நூல் என்று கூறப்பட் டிருப்பதும் கருதற்பாலது.