பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 தமிழ் நூல் தொகுப்புக் கலை திரட்டு நூலாகும். "சிவப்பிரகாசர் பிரபந்தத் திரட்டு’ gఒత్తి. சிவப்பிரகாச அடிகளார் இயற்றிய பல நூல்கள் இணைந்த ஒரு திரட்டு நூலாகும். ஒருவர் நூல்களின் இரட்டாகிய இத்தகையன, திரட்டு வகைகள் இரண்டனுள் இரண்டாவது வகையாகும். இவற்றிற்குத் தனி மாலைத் திரள்’ என்னும் பொதுப்பெயர் வழங்கலாம். 3. பாடலும் நூலும் கலப்பு தனித்தனிப் பாடல்கள் பலவும், தனித்தனி நூல்கள் சிலவும் அல்லது பலவும் கலந்த தொகை நூல்களை மூன்ரும் :பிரிவாகச் சொல்லலாம். இதற்குப் பலரும் அறிந்த எடுத்துக் காட்டு ஒன்று வேண்டுமானல், பாரதியார் கவிதைகள்’ என்னும் நூலைக் கூறலாம். இதில், பல்வேறு பொருள்கள் பற்றிப் பாரதியார் பாடிய உதிரிப் பாடல்கள் பலவும், பாஞ்சாலியின் சபதம் - கண்ணன் பாட்டு - குயிற் பாட்டு - சுய சரிதை - புதிய ஆத்திசூடி முதலிய சிறு நூல்கள் சிலவும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய கலப்புத் இதாகை நூல்களுக்கு மலரும் மாலையும் என்னும் பொதுப் ೧೬u குட்டலாம். இத்தகைய நூல்களிலும், பலர் ur-J567- நூல்களின் கலப்பு. ஒருவர் பாடல் - ಮಹ6ಗಿ கலப்பு என இரு வகைகள் உண்டு. இவ் விருவகைத் தொகை நூல்களும் தமிழில் நிரம்ப உள்ளன. அவை பின்னர் உரிய பகுதியில் இடம் பெறும். o தமிழில் உள்ள தொசை நூல் ஒவ்வொன்றும் மேற்கூறி யுள்ள பிரிவுகளுள் ஏதாவது ஒன்றினைச் சார்ந்ததா யிருக்கும். மற்றும். முன்னர்த் தண்டியலங்காரத்தின் துணைகொண்டு r எடுத்துக்காட்டப்பட்டுள்ள தொகை நூல் இலக்கண விளக்கப்படி, குறிப்பிட்ட பொருள், இடம், காலம், பண்பு தொழில், அளவு, பாவினம், இலக்கியம், கலே, சுவை Garrce. மக்கள், கடவுளர் முதலிய 8 తేడెట్రోజే ஒன்றையோ பலவற்றையோ அடிப்படையாகக் கொண்டு ஆதொகுக்கப் பெற்றிருக்கும். மொழியில் நூல் தொகுப்புக் ණර්‍ය් 93. இனி, அடுத்தபடியாக, தமிழ்த் தொகை நூல்களே, முற்காலத் தொகை" நூல்கள், இடைக்காலத் தொகை நூல்கள், பிற்காலத் தொகை நூல்கள். இருபதாம்: நூற்ருண்டுத் தொகை நூல்கள் என்னும் பெரும் பகுதிகளின் கீழ் விரிவாக விளக்கமாகக் காணலாம். அந்தந்தப் பகுதியிலும் ஒல உட்பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு தொகை நூலும் எந்தப் பொருளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றது என்ற விவரமும் கிடைக்கும். - மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகச் சொல்லப்படும். தொல்காப்பியத்திலேயே, *உரைநடை நூல்கள் நான்கு வகைப்படும் என்று கூறப்பட்டிருப்பினும், தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தமிழில் தனி உரைநடை நூல்கள் எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்துக்கு முன்னே பின்ஞே) எழுதப்பட்டிருப்பினும் ஒர் உரைநடை நூலும் கிடைத்திலது. தமிழகத்திற்கு ஐரோப்பியர் வந்தபின்பே தமிழில் தனி உரைநடை துல்கள் தோன்றத் தொடங்கின. இன்று பெரிய அளவில் தமிழில் உரைநடை அமைந்துள்ளது. ஐரோப்பிய மொழிகளில் பாடல் தொகைநூல்களைப் போலவே உரைநடைத் தொகைநூல்களும் தொகுக்கப்பட் டிருப்பினும், இந்த நூலில் நாம் உரைநடைத் தொகுப்புக் கaத் தொகை நூல்களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆஞல், தொல்காப்பியம் சங்கநூல்கள் முதலிய இலக்கண - இலக்கிய நூல்களுக்குப் பழைய உரையாசிரியர்கள் எழுதி யுள்ள உரைகள், செய்யுள் போன்ற தகுதியுடையனவாத லாலும், அவ்வுரைகளுக்கிடையே பல பாடல்கள் தொகுத்துத் தரப்பட்டிருப்பதாலும், இந்நூலில் பழைய உரையாசிரியர் களின் உரைநூற்கள் இடம் பெறும் ஒவ்வோர் உரைநூலையும் ஒவ்வொரு பாடல் தொகுப்பு நூலாகக் கொள்ளலாம். மற்றும், தண்டியலங்கார உரையாசிரியர், திருக்குறள் போன்றவற்றைத் தொகை நூல்கள் என்று கூறியிருப்பினும், • தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் நூற்பா 166.