பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தொல்காப்பியத்துக்கு முன் ( தலைச் சங்க காலம் ) இதுவரையும் முழுமையாகக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் மிகவும் முற்பட்டதான தொல்காப்பியம், ஏறக் குறைய மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர்- அதாவதுகி.மு பத்தாம் நூற்றுண்டுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக ஆராய்ச்சியாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் இலக்கியம் அன்று; ஒர் இலக்கண நூல். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், செய்யுள் இயற்றுவதற்கு இலக்கணம் கூறும் செய்யுளியல்’ என்னும் ஒரு பகுதி உள்ள தென்றும், அந்தப் பகுதியில் ஆசிரியர் தொல்காப்பியர் தமக்கு முன்னலேயே புலவர் பலர் செய்யுள் இலக்கண நூல்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டி இயற்றியிருப்பதாகப் ( பக்கம் - 5 } யுள்ளார் என்றும் முன்னர் ஒரிடத்தில் கூறியுள்ளோம்.மற்றும், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றபடி, இந்த இலக்கண நூல்கள் தோன்றுவதற்கு முன்பே, தமிழில் பல செய்யுள்கள், பல செய்யுள் நூல்கள் தோன்றியிருந்தன என்ற குறிப்பும் ஆங்கே கொடுக்கப்பட் டுள்ளது. அன்றியும், முழுச் செய்யுள் நூல்கள் தோன்று வதற்கு முன்பு, தனித்தனி உதிரிப்பாடல்களே தோன்றி யிருக்க முடியும் என்ற செய்தியும் ஆங்கே அறிவிக்கப்பட் டுள்ளது. அங்ங்னமெனில், தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே இயற்றப்பட்ட பாடல்கள் எங்கே? பாடல் நூல்கள் எங்கே? இந்த வினவிற்குத் தக்க விடை கிடைக்குமா? தொல்காப்பியராலேயே கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்கண நூல்கள் எல்லாம் இல்லாது ஒழிந்தது போலவே இலக்கியங்களும் மறைந்து போயின. முழு முழு நூல்களே மறைந்து போயிருக்கின்ற நிலையில், தனித்தனி உதிரிப் பாடல்களின் தலையெழுத்து என்னவாயிருக்க முடியும்?