பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

தமிழ்ப்பா மஞ்சரி
குலம்பூத்த புலவர்புகல் இனியகவிக்
குளம்மகிழும் குணமா மேரு
வலம்பூத்த இயற்றமிழ்தேர் தியாகரா
சப்பெயர்நா வலவன் மாதோ. - (18)
வேம்பத்துார்ப் பிச்சுவையர்
(இவர் பல தனிப் பாடல்களேயும் சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். சிலேடைப்புலி என்ற சிறப்புப் பெயர் உடையவர்.)


(வெண்பா)


673. நிம்பையில்வந் துங்கன்னல் நேர நவவிரத

மும்பயில்யாப் புக்கள் மொழிபலருள்-ளும்பலகால்
மெய்யன்போ டேகற்றோர் மெச்சப்பா டும்பிச்சு
ஐயன்போற் பாடுபவர் ஆர்.


பெரியசாமி முத்தைய உடையார்
(இவர் பெரும்பன்றியூர் என்னும் ஊரில் வாழ்ந்த செல்வர். தமிழ்ப்

புலமையும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்பும் உள்ளவர். கிறிஸ்தவ

சமயத்தைச் சார்ந்தவர். தஞ்சையில் புகழுடன் விளங்கிய திரு பன்னீர் செல்வத்தின் மாமனர்.)


67.4. அளவாச் சுவைத்தமிழை ஆதரிப்போன் பல்சீர்

உளவாம் பெரும்பன்றி யூர்வாழ்-வுளசுகுணன்
சார்ந்த புகழ்ப்பெரிய சாமியண்ணல் எந்நலமும்
சேர்ந்திருக்க என்பன் தினம். (1)


672. வலம்-வெற்றி.

673, பிச்சுவையர் வகையுளி வரப் பாடுபவராதலின் இந்தப் பாடலும்

அப்படி அமைந்தது.

நிம்பை - வேம்பத்தூர், வேம்பத்தூரில் தோன்றிலுைம் கரும்பைப் போலப் பாடுகிறவர் என்றபடி,

கன்னல் நேர-கரும்பை ஒப்ப.

நவ இரதம் - ஒன்பது சுவை.

யாப்புக்கள் - கவிகள்.