பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இனிக் கும். கோ ணக் கலாசாலையில் தமிழ்ப் புலமை டாத்திவரும் மகா வித்துவான் பிரம்மஸ்ரீ உ. வே. சுவாமிநாத ஐயரவர்கள் தாம் பதிப்பித்த சிலப் பதிகாரத்தினும் மணிமேகலையிலும் தமிழ் நால்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்களெழுதி இருக்கின்றனர். இன்னும் புறநானூற்றிலும் நல்லிசைப் புலவர் பலருடைய சரித்திரக் குறிப்புக்களும் அப்புலவர்களை யாதாத்தாரைப் பற்றிய குறிப்புக்களும் வரையப்பட்டுள. இவையனைத்தையும் ஒருங்கு தொகுத்து இன்னும் தாம் அருமையாகக் கண்டு குறித்துவைத்துள விஷயங் களைப்பும் கூட்டித் தனி நூலாக வெளிப்படுத்தப் போகின்றனரெனக் கேள்வி 4.ற்றுக் கழிபேருவகை பூக்கின்றாம். இம்முயற்சி கைகூடுமாறு நம் ஐயரவர் கட்கு இறைவன் திருவருள் புரிவானாக. இடையிற் பாறைக்கிணறு வெட்டப்புகுந்து முகவையம்பதி முதலிய இடங்களில் பெரும்புகழ் படைத்தவரும், திருவாமத்தூரிலிருந்து காலங் கழித்தவருமாகிய திருப்புகழ்ச் சுவரமிகள்' என்ற முருகதாச சாமியார் இயற்றிய * *புலவர் புராணம்' என்றதோர் நூல் வெளிப்போந்துள்ளது. இந் நூல் முழுதுஞ் செய்யுளானியன் றுள து, சாமானியமாகப் புலவர் வீடுகளிற் கதையாகச் சொல்லிக்கொள்ளும் விஷயங்களெல்லாம் ஒருவாறு தொகுத்து இந்நூலின்கட் கூறப்பட்டுள. காலவரையறை, நாலாராய்ச்சி முதலியன இச் நூலின்கட் கண்டிலேம். இதனையொரு காப்பியமாகக் கருதி ஆராய்தல் ஈண்டு. எடுத்த விஷபமன்று, தமிழ்ப் புலவர் சரிதமாகுமட்டில் இஃது ஒாாற்றாற் பயன்படுவதாகும். இதுகாறும் தமிழ்ப் புலவர் சரித விஷயமாக வெளிப்பட்ட நூல்களைப் பற்றி யுரைத்தாம். இதைச் சிற்சில நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் அவ்வந்தாலின் பதிப்புரைக்கண் நாகரிடர் 23 Jலாறுகளும் தாங்கள் ஆராய்ச்சி செய்தமட்டிற் க றியிருக்கின்றனர். சிலர் இக்காலத்தில் வெளிப் படும் தமிழ்ப் பத்திரிகைகளில் விஷயங்களாகத் 4.உழ்ப் புலவர் சிலரைப்பற்றி யெழுதியிருக்கின்றனர். இதற்கிடையிற் சில்லாண்டுகட்கு முன்னர் அஷ்டா வதானி - வீராசாமி செட்டியார் என்பார் ' வினோத ரசமஞ்சரி' என்பதோர் நூலியற்றி யிருக்கின்றனர். அஃது அதன் பெயர்ப் பொருளின்படி விநேர தார்த்தமாக எழுதப்பட்டதோர் கதைத் தொகுதியெனக் கொள்ளற்பாதே யன்றித் தமிழ்ப் புலவர்களைப் பற்தீயதோர் மெய்ச் சரிதமாகக் கொள்ளப்படுவ தன் று, எனவே குறைபாடுகளனைத்தும் நீங்கி, யாவரும் ஏற்று மேற்கொள் ளத் தக்கதாய் தமிழ்ப் புலவராவாாைேனவரையும் பற்றி ஒருங்கே கூறுவதாய் அன்னாசிபயற்றிய கால்களின் ஆராய்ச்சிகளுமுடையதாய்க் காலவரையறையும் தெளிவு பெற சியாயவாழலாற் காட்டுவதாய் ஒரு தமிழ் நூல் இதுகாறும் வெளிப்பட்டினது. அத்தகைய தொன்று என் று வெளிப்படுமோ? அறி : போம். இந்த விஷயத்தைக் குறித்து நம்முடைய மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கத்தின் அதிகாரிகள் நன்கு கவனித்து நடப்பாராக. வி. கோ . சூ. ' * அது கனம் பொருக் திய திவான் பகதூர் வ. கிருஷ்ணமா சாரிய சுவர் களாற் பதிப்பிக்கப்படுகின்றது. முதற் பாகம் வெளியாயிற்று, பன்னிரண்டு பாகங்களும் விரைவில் வெளிவரும் என்று நம்புகின்றோம். இதன் முதற் பாகத்தில் சில பகுதி கள் நமது சர்வ கலாசாலையின் பிரதம கலா பரீஷைக்கும், கலா வித்தியார்த் திபட்ட பரீஷைஃக்கும், கலா மா ய* பட்ட பரீஷைக்கும், பாடமாக ஏற்படுத்தப்பட்டுன. (இப் பொழுது இந்நூல் முழுதும் அச்சிடப்பட்டு வெளிவர உள்ளது.)