8
தமிழ்ப் பழமொழிகள்
அகங்கை புறங்கை ஆனாற் போல.
அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா? 60
அகடவிகடமாய்ப் பேசுகிறான்.
அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே.
- (அகத்தியை வீட்டில் வளர்க்கக் கூடாது என்பர்.)
அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன?
அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார்.
அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா? 65
அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம்.
அகத்திலே உண்டானால் அம்பி சமத்து.
அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம்.
- {பா-ம்.) அகத்துக்காரப் பிராம்மணன் அடிமுண்டை என்றால்.
அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம்.
அகத்துக்கு அழகு அகமுடையாள். 70
அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல்.
- (அசல்-அயல்.)
அகத்துக்கு முகம் கண்ணாடி.
அகத்துக்கு மூத்தது அசடு.
அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான்.
அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே. 75
அகதிக்கு ஆகாசமே துணை.
அகதிக்கு ஆண்டவன் துணை.
- (பா-ம்.) தெய்வமே துணை.
அகதி சொல் அம்பலம் ஏறாது.
அகதி தலையில் பொழுது விடிந்தது.
அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம். 80
அகதியை அடித்துக் கொல்லுகிறதா?
- (பா-ம்) பிடித்து.
அகதியைப் பகுதி கேட்கிறதா?
அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா.