பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தமிழ்ப் பழமொழிகள்


ஆமை தன் வாயால் கெட்டது போல.

ஆமை திடலில் ஏறினாற் போல. 2255

ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அதைச் சொன்னால் பாவம்.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த விடும் உருப்படா.

ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த ஊரும் பாழ்.

ஆமை மல்லாத்துகிறாற் போல.

ஆமையுடனே முயல் முட்டையிடப் போய் கண் பிதுங்கிச் செத்ததாம். 2260

ஆமையைக் கவிழ்த்து அடிப்பார்களோ; மல்லாத்திச் சுடுவார்களோ? நான் சொன்னால் பாவம்.

ஆமை வேகமா, முட்டை வேகமா?

ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது.

ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம்.

ஆய்ந்து ஓய்ந்து பாராதான் தான் சாவக் கடவான். 2265

ஆய்ந்து பாராதான் காரியம் தான் சாந்துயரம் தரும்.

ஆய் பார்த்த கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்.

ஆய் பிச்சை எடுக்கிறான்; பிள்ளை ஜட்ஜ் வேலை பார்க்கிறான்.

ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது.

ஆயிரக் கல நெல்லுக்கு ஓர் அந்து போதும். 2270

ஆயிரத்தில் ஒருவனே அலங்காரப் புருஷன்.

ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கண் விழிக்கிறது.

ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல.

(பா-ம்.) ஐந்நூற்றிலே விழித்தாள்; காலை வைக்கிறது.

ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனைப்பலம்.

ஆயிரம் அரைக் காசு. 2275

ஆயிரம் ஆனாலும் அவிசாரி சமுசாரி ஆகமாட்டாள்.

ஆயிரம் ஆனாலும் ஆரணிச் சேலை ஆகாது.

ஆயிரம் ஆனாலும் பெண் புத்தி பின்புத்தி.

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது.

(பா-ம்.) ஆகுமா?

ஆயிரம் ஆனாலும் மாயூரம் வெண்ணெய் ஆகுமா? 2280

ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; துணி பொறுக்கி தோம் தோம் என்று கூத்தாடுவான்.

(பா-ம்.) தொந்தோம் தொந்தோம் என்று.