பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தமிழ்ப் பழமொழிகள்


ஆயிரம் தலை படைத்த ஆதிசேடனாலும் சொல்ல முடியாது.

ஆயிரம் நட்சத்திரம் கூடிச் சந்திரன் ஆகுமா?

ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது. 2310

(பா-ம்.) ஆகுமா?

ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்.

ஆயிரம் நாள் இருந்தாலும் அநியாயச் சாவு.

ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?

(பா-ம்.) உதைத்துக் கொண்டால் என்ன?

ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு; கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு.

ஆயிரம் பனை உள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஓர் ஈர்க்கு இல்லை. 2315

ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும்.

(பா-ம்.) சொல்வான்.

ஆயிரம் பாம்பில் ஒரு தேரை பிழைக்கிறாற் போல.

ஆயிரம் பாம்பினுள் அகப்பட்ட தேரைபோல.

ஆயிரம் பேர் கூடினாலும் ஓர் அந்துப்பூச்சியைக் கொல்லக் கூடாது.

ஆயிரம் பேர் இடத்தில் சிநேகம் பண்ணினாலும் ஆண்பிள்ளைகளுக்கென்ன? 2320

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

(பா.ம்.) வேரைக் கண்டவன்; அரைப் பரியாரி.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வை.

(பா-ம்.) ஒரு தாலி கட்டி வை.

ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.

ஆயிரம் பொன் பெற்ற ஆணை பல் விளக்குகிறதா?

ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பனத்தில் சவுக்கு. 2325

(பா-ம்.) கழுதைக்கு.

ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.

ஆயிரம் பொன் போட்டு ஆனை வாங்கி அரைப் பணத்து அங்குசத்துக்குப் பால் மாறுகிறதா?

(பா-ம்.) ஆயிரம் வராகன் அழுவதா?