பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தமிழ்ப் பழமொழிகள்


ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதம் செய்தான்.

(பா-ம்.) ஆகுமா?

ஆரும் இல்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளை.

ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிறவனுக்குத் தெரியுமா?

ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் பெறுகிறது. 2400

ஆரைக் காது குத்துவது?

ஆரைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.

ஆரை நம்பித் தோழா, ஆற்றுக்கு ஏற்றம் போட்டாய்?

(பா-ம்.) காருக்கு

ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது.

ஆரை பற்றிய நஞ்சையும் அறுகு பற்றிய புஞ்சையும். 2405

(களைபோக்கல் கடினம்.)

ஆரோக்கியம் பெரும் பாக்கியம்.

ஆரோக்கியமே ஆயுசு விருத்தி.

ஆரோ செத்தாள்? எவளோ அழுதாளாம்.

(பா-ம்.) எவனோ; ஏனோ.

ஆரோடு போனாலும் போதோடு வந்துவிடு.

(குறவர் பேச்சு.)

ஆல் என்னிற் பூல் என்னுமாறு 2410

(பழமொழி நானூறு.)

ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.

ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்.

(பா-ம்.) ஆல்போல் கிளைத்து விழுது விட்டு.

ஆலகால விஷம் போன்றவன் அந்தரம் ஆவான்.

ஆலங்காட்டுப் பேய் மாதிரி அலைகிறான்.

ஆலசியம் அதிக விஷம். 2415

(பா-ம்.) அமுதமும் விஷம்.

ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது.

ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா?