பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தமிழ்ப் பழமொழிகள்


ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள்.

(நிதானமாகச் செய்யலாம் என்பது கருத்து.)

ஆவணி அழகன்.

(வெற்றிலை.)

ஆவணி அழுகல் தூற்றல். 2440

(பா-ம்.) ஆவணி மாதம் அழுகைத் தூற்றல்.

ஆவணி இலை அசையக் காவேரி கரை புரள.

(பா-ம்.) இலை உதிர.

ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி.

ஆவணி பறந்தால் புரட்டாசி வரும்; தாவணி பறந்தால் புடைவையாகி வரும்.

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்.

ஆவணி மாதம் அழுகைத் துாற்றல். 2445

ஆவணி மாதம் ஐந்தாந் தேதி சிங்க முழக்கம், அவ்வருஷம் மழை.

ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.

ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அனைத்து நடு.

ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும்.

ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும். 2450

ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான்.

ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம்.

ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.

ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை. 2455

ஆவர் மாத்திரம் இருந்தால் என்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.

ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும்.

ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?

(உள்ள இடத்தில் சாவார் உண்டா?)

ஆவுடையார் கோயில் அடங்கலுக்குப் புறத்தி.