108
தமிழ்ப் பழமொழிகள்
ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது. 2480
- (காழி-சீகாழி.)
ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்துாரான்; கடா வெட்டுக்கு மோகனுராான்.
- (நாமக்கல் தாலுக்காவில் உள்ள ஊர்கள் இவை.)
ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும்.
ஆழும் பாழும் ஆகிறது.
ஆள் அகப்பட்டால் மிரட்டுகிறதா?
ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளாதவனும் ஒன்று. 2485
ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம்.
ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது.
ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு.
ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது?
ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும். 2490
ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும்.
ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆனை மறக்குமா?
ஆள் இருக்கக் குலை சாயுமா?
- (கொலை)
ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி அடிக்கும்.
ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ். 2495
ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல.
- (இல்லாத ஊரில்.)
ஆள் இல்லாப் படை அம்பலம்.
ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடு இல்லாப் பத்தினி.
ஆள் இல்லாமல் அடிக்கடி ஓடுமா?
ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா? 2500
ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
- (இளந்தலை-குறைவு; கனம் இன்மை.)