பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

109


ஆள் இளந்தலை கண்டு தோணி மிதக்கும்.

ஆள் இளப்பமாய் இருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான்.

ஆள் இளப்பமாய் இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.

ஆள் இளைத்ததைக் கண்டால் ஆவாரையும் பீ வாரி அடிக்கும். 2505

ஆள் உள்ளுக்குள்ளே இருக்கிறான்.

ஆள் ஏற நீர் ஏறும்.

ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும்.

ஆள் கண்ட சமுத்திரம்.

ஆள் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி. 2510

(மிரட்டுமாம்.)

ஆள் காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் பிடித்துக கொடுக்கும்.

ஆள் காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா?

ஆள் காட்டிய விரலுக்கும் அன்னதானப் பலன்.

(விதுரன்.)

ஆள் கால், வாய் முக்கால்.

ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண். 2515

ஆள் கொஞ்சம் ஆகிலும் ஆயுதம் மிடுக்கு.

ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும்.

ஆள் பாதி, அலங்காரம் பாதி.

ஆள் பாதி, ஆடை பாதி.

ஆள் பாதி, ஏர் பாதி. 2520

ஆள் பாரம் பூமியிலே.

ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்தியமம்; தான் போகிறது உத்தமம்.

ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி.

ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை.

ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது. 2525

ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.

ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது.