பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

113


ஆற்றிலே போனாலும் போவேனே அன்றித் தெப்பக்காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம்.

ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று. 2600

ஆற்றிலே வருகிறது, மணலிலே சொருகுகிறது.

ஆற்றிலே விட்ட தர்ப்பை போல் தவிக்கிறேன்.

ஆற்றிலே விட்ட தெப்பத்தைப் போலத் தவிக்கிறேன்.

ஆற்றிலே விளைகிறது மணலிலே சிதறுகிறது.

ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும். 2605

ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா?

ஆற்று அருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலை அல்ல.

(இருந்த வாழ்வும், அரசன் அருகில் இருந்த.)

ஆற்றுக்கு அருகில் குடியிருந்த கதை.

ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணல்.

ஆற்றுக்குச் செய்து அபத்தம்; கோயிலுக்குச் செய்து குற்றம். 2610

ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி.

ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா?

(பார்ப்பான் துணை அல்ல, பயற்றங்காய் கறியா?)

ஆற்றுக்குப் போகிறதும் இல்லை; அழகரைக் கும்பிடுகிறதும் இல்லை.

ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்?

ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம். 2615

ஆற்றுக்கும் பயம்; காற்றுக்கும் பயம்.

ஆற்றுக்கும் போகவேண்டாம்; செருப்பையும் கழற்ற வேண்டாம்.

ஆற்றுக்கு மிஞ்சி அரஹராப் போட்டாலும் சோற்றுக்கு மிஞ்சித் சொக்கேசன்.

ஆற்றுக்குள்ளே போய் அரஹரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறானாம் சொக்கலிங்கம்.

(ஆற்றுக்குள்ளே நின்று.)

ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்றான். 2620

ஆற்றுநீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர் தான்.