பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

115


ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி.

ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.

ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ? 2645

ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை.

ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால்.

ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்?

ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ?

(கருப்பு-பஞ்சம்.)

ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன்.

ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே. 2650

(திருநெல்வேலி மாவட்டப் பழமொழி.)

ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே.

ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன்.

ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான்.

(தெப்பக்காரனுக்கு ஒரு காசு.)

ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன். 2655

ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது.

ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூல கொடுக்க மாட்டேன் என்றானாம்,

(போகிறதே அல்லாமல் தெப்பக்காரனுக்கு ஒரு காசு கொடுக்கிறது இல்லை.)

ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும்.

ஆறாம் திருநாள் ஆனை வாகனம்.

ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆனான வாழ்வு நீறாய் விடும். 2660

(ஆனான குடித்தனம்.)

ஆறாம் மாசம் அரைக் கல்யாணம்.

ஆறா மீனின் ஓட்டம்.