தமிழ்ப் பழமொழிகள்
115
ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி.
ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ? 2645
ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை.
ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால்.
ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்?
ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ?
- (கருப்பு-பஞ்சம்.)
ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன்.
ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே. 2650
- (திருநெல்வேலி மாவட்டப் பழமொழி.)
ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே.
ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன்.
ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான்.
- (தெப்பக்காரனுக்கு ஒரு காசு.)
ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன். 2655
ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது.
ஆற்றோடே போனாலும் போவேன்; தெப்பக்காரனுக்குக் கூல கொடுக்க மாட்டேன் என்றானாம்,
- (போகிறதே அல்லாமல் தெப்பக்காரனுக்கு ஒரு காசு கொடுக்கிறது இல்லை.)
ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும்.
ஆறாம் திருநாள் ஆனை வாகனம்.
ஆறாம் பேறு பெண்ணாய்ப் பிறந்தால் ஆனான வாழ்வு நீறாய் விடும். 2660
- (ஆனான குடித்தனம்.)
ஆறாம் மாசம் அரைக் கல்யாணம்.
ஆறா மீனின் ஓட்டம்.