116
தமிழ்ப் பழமொழிகள்
ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான்.
ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம்.
- (ஆண்பிறந்தால்.)
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. 2665
ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு.
ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும்.
ஆறின சோறு பழஞ் சோறு.
ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். 2670
- (அசடு-பொறுக்கு.)
ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார்,
ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும்.
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
- (இல்லை, வாக்குண்டாம்.)
ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை.
ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி. 2675
ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?
ஆறுக்கு இரண்டு பழுதில்லை.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி; ஆறு கடந்தால் நீ ஆர்? நான் ஆர்?
ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே.
ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது. 2680
- (தள்ளுகிறது.)
ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்?
- (அரைச் சீலையை, அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம்.)
ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம்.
ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை.
ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலியை விடு.
- (முதலையை.)
ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி. 2685
ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி.