பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

117


ஆறு கொத்து, நூறு இறைப்பு; ஆறு சீப்பு, நூறு காய்.

(வாழை.)

ஆறு கொத்து, நூறு தண்ணீர்.

(வாழை.)

ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ?

ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல். 2690

ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?

ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம், சாய்கிறது கொஞ்சம்.

ஆறு நிறைய நீர் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.

(ஜலம், வெள்ளம்.)

ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?

ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு? 2695

ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும்.

ஆறு நேராய்ப் போகாது.

ஆறு நேரான ஊர் நில்லாது.

ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருஷனோடு ஏறு மாறான பெண்டிரும் நீறு நீறு ஆகிவிடும்.

ஆறு பாதிக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. 2700

ஆறு பார் ஒத்து வந்தாலும் நாய் நக்கிக் குடிக்கும்.

ஆறு பார்க்கப் போக ஆய்க்குப் பிடித்தது சளிப்பு.

ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண்.

ஆறு பிள்ளை அழிவுக்கு லட்சணம்.

ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவமாம். 2705

ஆறு போவதே கிழக்கு; அரசன் செல்வதே வழக்கு.

(சொல்வதே.)

ஆறு போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆறும் கடன்; நூறும் கடன், பெரிசாச் சுடடா பணியாரத்தை,

ஆறும் கருவில் அமைத்தபடி.

(ஆறு-பேர், இன்பம், தாரம், பிணி, மூப்பு, சாக்காடு.)