122
தமிழ்ப் பழமொழிகள்
ஆனை ஒரு குட்டி போடுவதும் பன்றி பல குட்டி போடுவதும் சரி ஆகுமா?
ஆனைக்கண் ஐசுவரியம்.
ஆனைக் கண்ணிலே மோதிரம் பண்ணி வானக் கண்ணி போட்டாளாம். 2810
ஆனைக்கண் விழுந்த பலாக்காய் போல.
ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
ஆனைக் கறுப்பைக் கண்ட அட்டை, எனக்கு என்ன குறைச்சல் என்று சொல்லிக் கொண்டதாம்.
ஆனைக் கன்றும் வளநாடும் கொண்டு வந்தானோ?
ஆனைக்காரன் ஆனைக்குத் தன் வீட்டைக் காண்பித்துக் கொடாதது போல. 2815
ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.
ஆனைக்காரன் பெண்டாட்டி பூனைக்குட்டியைப் பெற்றாளாம்.
ஆனைக்காரன் மனைவி ஆண் பிள்ளை பெற்றால் காச்சு மூச்சென்றிருக்கும்.
ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு.
ஆனைக்கால்காரன் மிதித்து விடுவதாகப் பயங்காட்டலாம்; மிதிக்கக் கூடாது 2820
ஆனைக் காலில் அகப்பட்ட செல்லுப் போல.
ஆனைக் காலில் பாம்பு நுழைந்தாற் போல.
ஆனைக் காலில் மிதிபட்ட சுண்டெலி போல.
ஆனைக் காலின்கீழ் எறும்பு எம்மாத்திரம்?
ஆனைக்கு அகங்காரமும் பெண்களுக்கு அலங்காரமும். 2825
ஆனைக்கு அடி தூரம், எறும்புக்கு ஏழு காதம்.
ஆனைக்கு அம்பாரி அழகு; அரசனுக்கு முடி அழகு.
ஆனைக்கு அரைஅடி; எலிக்கு எட்டு அடி.
ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
- (அறுபது அடி, அருங்குள்ளனுக்கு எழுபது அடி.)
ஆனைக்கு ஆயிரம் பாத்தி வேணும்; தோட்டக்காரன் என்ன செய்வான்? 2830
ஆனைக்கு ஆயிர முழம் அகல வேணும்,
- (நீதி வெண்பா.)