பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தமிழ்ப் பழமொழிகள்


ஆனைக்குத் தேரை இட்டது போல,

(தேரையூன் இரை இட்டது போல.)

ஆனைக்கு நீச்சம், முயலுக்கு நிலை.

ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு.

ஆனைக் குப்பத்தான் போலே,

(ஆனைக்குப்பம்-திருவாரூருக்கு அருகில் உள்ள ஓர் ஊர், போக்கிரி என்று பொருள்.)

ஆனைக்குப் பனை சர்க்கரை. 2865

ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது.

ஆனைக்குப் பூனை போலவும் வால் இல்லையே!

ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும்.

ஆனைக்கும் அடி சறுக்கும்.

ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும். 2870

ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும்.

ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி?

ஆனைக்கும் உண்டு அவகேடு.

ஆனைக்கும் சரி, பூனைக்கும் சரி.

ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போச்சு. 2875

ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.

ஆனைக்கு மங்கள ஸ்நானம்; கிண்ணத்தில் எண்ணெய் எடு.

ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்குக் கிலி பிடிக்க.

ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது.

ஆனைக்கு முன் முயல் முக்கினது போல. 2880

ஆனைக்கு ராஜா மூங்கில் தடி.

ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா?

ஆனைக்கு வாழைத்தண்டு; ஆளுக்குக் கீரைத்தண்டு.

ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறு இல்லையா?

(வேகிற சோற்றில் பூனைக்குப் பங்கு இல்லையாம்.)

ஆனைக் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல. 2885

ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்?

ஆனைக் கேடும் அரசு கேடும் உண்டா?

ஆனை கட்டச் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுக்கும்.

(கயிற்றைக் கொடுத்தது போல.)

ஆனை கட்டத் தாள்; வானை முட்டப் போர்.

ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டி ஆவான். 2890