தமிழ்ப் பழமொழிகள்
125
ஆனை கட்டி ஆளும் அரசனோ?
ஆனை கட்டி உழுகிறான்.
ஆனை கட்டித் தீனி போட முடியுமோ?
ஆனை கட்டியார் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் ஆறு கலம் அரிசி யாவது சிறப்பு வைக்க வேண்டாமா?
ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை. 2895
ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும்.
ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா?
ஆனை கண்ட பிறவிக் குருடன் அடித்துக் கொள்கிறது போல,
ஆனை கண் பருத்தால் அகிலத்தை ஆளாதா?
ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீனைப் பிடிக்கச் சென்றதாம். 2900
ஆனை கவுளில் அடக்கிய கல்லைப்போல.
- (அடக்கியது போல.)
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; அட்டைகறுத்தால் உதவி என்ன?
- (பூனை கறுத்தால் உதவி என்ன?)
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் என்ன பெறும்?
- (ஆகும்?)
ஆனை கறுத்தால் என்ன? அசல் வீடு வாழ்ந்தால் என்ன?
ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும். 2905
ஆனைகறுப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான்.
ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை.
ஆனை காணாமற் போனால் இரண்டு சட்டியில் தேடினால் அகப்படுமா?
ஆனை காதில் கட்டெறும்பு புகுந்தாற் போல.
ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்ட வில்லை. 2910
- (இடக்கர்.)
ஆனை குட்டி போட்டாற் போல்.
ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற்போல.
ஆனை குட்டி போடுகிறது என்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும்.
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)