பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ்ப் பழமொழிகள்


ஆனை குட்டி போடும் போடும் என்று எண்ணி லத்தி போட்டதாம்.

(என்று நம்பி.)

ஆனை குட்டையைக் குழப்புவது போல. 2915

ஆனை குடிக்கும் ஜலம் பூனை குடிக்குமா?

ஆனை குண்டு சட்டியிலும் குழிசியிலும் உண்டோ?

ஆனை குப்புற விழுந்தால் தவளைகூட உதைத்துப் பார்க்குமாம்.

ஆனை குளிக்கச் செம்பு ஜலமா?

ஆனை குளித்த குளம் போல. 2920

ஆனை குறட்டில் அவல் அடக்குகிறதுபோல எந்த மட்டும் அடக்குகிறது?

ஆனை கெட்டுக் குடத்தில் கை இடுகிறதா?

ஆனை கெட்டுப் போகக் குடத்தில கைவிட்டுப் பார்க்கிறதா?

ஆனை கெடுத்தவன் குடத்தில் கை இட்டாற் போல.

ஆனை கெடுத்தவன் பானையில் தேடினாற் போல. 2925

(குடத்தில்.)

ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா?

ஆனை கேடு, அரசு கேடு உண்டா?

ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா?

ஆனை கொடுத்து ஆடு வாங்கினான்.

ஆனை கொடுத்தும் அங்குசத்துக்குப் பிணக்கா? 2930

(கொண்டும்.)

ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்,

ஆதுை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத்தால் கீரைத்தண்டு.

ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?

ஆனைச் சிவப்பிலும் அதிகச் சிவப்பு!

ஆனைக் கவடும் பூனைத் திருடும். 2935

ஆனைச் சொப்பனம் கண்டவருக்குப் பானைப் பொன்.

ஆனை சிங்கக்குட்டி போடுவது போல.

ஆனை சிந்திய சிறு கவளம் எறும்புக் கூட்டத்துக்குப் பெருவளம்.

ஆனை சீர் தந்த எங்கள் அம்மான் கத்திரிக்காய்க்குக் குண்டா கரணம் போடுகிறான்.

ஆனை செத்தாலும் ஆயிரம் பொன். 2940