பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

127


ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை.

ஆனைத் தலையளவு பெருங்காயம் கரைத்த வீடா?

ஆனைத் துதிக்கையில் எலும்பே கிடையாது.

ஆனைத் தோலை எலி கரண்டினது போல.

ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம். 2945

ஆனை தரைக்கு ராஜா; முதலை தண்ணீருக்கு ராஜா.

ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டியைத் தழுவுகிறதா?

ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போல.

ஆனை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்வது போல.

(தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல.)

ஆனை தன் பலம் அறியாது. 2950

ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல.

ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தை மதில் சுவரில் முட்டிக் கொண்டது போல.

ஆனை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுத்தது போல.

ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.

ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை. 2955

ஆனை தின்ற விளாங்கனி போல.

ஆனை தும்பிக்கையில் வீசுகிறது என்று கழுதை வாலால் வீசினது போல.

ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.

(ஆனைக்காவில்.)

ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான்.

ஆனை தொட்டாலும் மரணம் வரும். 2960

ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை.

ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்துக்கும் சமம்.

ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல.

(ஆனை கலைத்த கதை, அழுவதைப் போல, தவளை கனைத்ததாம், தவளை கலைத்த கதை.)

ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை.

ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும். 2965

ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா?

ஆனைப் பசிக்கு ஆத்திக் கீரையா?