தமிழ்ப் பழமொழிகள்
11
அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான்.
- (பா-ம்.)அந்திக் கண்ணன்.
அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன?
அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு.
அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை.
அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா? 130
- (பா-ம்.) சொல்லலாகாது.
அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம்.
அகமுடையானைக் கொன்ற அற நீலி.
அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது.
அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா?
- (பா-ம்) ஆடலாமா, ஆட்டம்.
அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்? 135
அகர நாக்காய்ப் பேசுகிறான்.
அகராதி படித்தவன்.
அகல் வட்டம் பகல் மழை.
அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை.
- (பா-ம்.) நீண்ட உறவு.
அகல இருந்தால் பகையும் உறவாம். 140
அகல இருந்தால் புகல உறவு.
அகல இருந்து செடியைக் காக்கிறது.
அகல உழுவதை ஆழ உழு,
- (பா-ம்.) அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது; அதனையும் அடுக்கு உழு.
அகலக் கால் வைக்காதே. 145
அகல விதை; ஆழ உழு.
அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன்.
அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்?
அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை.
அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை.
அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை. 150
அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான்.