தமிழ்ப் பழமொழிகள்
13
அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது. 175
அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம்.
- (பா-ம்.) இங்கே வாடி ஆலாய்ப் பறக்கலாம்.
அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா.
அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.
- (பா-ம்.) இருப்பாள்.
அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான்.
அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன். 180
- (பா-ம்.) திம்மட்டிராயன்.
அங்கும் சோதி; அடியேனும் சோதி.
- (சுவாதித்திருநாளிடம் ஒருவன் சொன்னது.)
அங்குஸ்தி இங்குஸ்தி.
அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம்.
அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு.
அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி? 185
- (பெண் கேட்கப் போனவன் கூறியது)
அங்கே போனேனோ செத்தேனோ?
அங்கேயும் தப்பி இங்கேயும் தப்பி அகப்பட்டான் தும்மட்டிக் காய்ப் பட்டன்.
அங்கை நெல்லிக்கனி.
- (ப-ம்.) பழம்.
அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்.
- (ப-ம்.) இல்லாதவன்.
அச்சம் ஆண்மையைக் குறைக்கும். 190
- (ப-ம்.) குலைக்கும்.
அச்சாணி அன்னதோர் சொல்.