156
தமிழ்ப் பழமொழிகள்
இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும்.
இளைத்தவன் சிநேகிதனைச் சேர்.
இளைத்தவன் தலையில் ஈரும் பேனும்.
இளைத்தவன் தலையில் சொட்டு.
- (கொட்டு.)
இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி. 3625
- (மைத்துனி.)
இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம்.
இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான்.
இளைத்து இனத்தாரிடம் போவானேன்?
இளைது என்று பாம்பு இகழ்வார் இல்.
- (பழமொழி நானூறு.)
இளையாள் இலை தின்னி; மூத்தாள் காய் அரிவாள். 3630
இளையாள் முகமோ, இழையாடிக் காற்றோ?
இளையாள் மோகம் கண்ணை மறைக்கிறது.
இளையாளே வாடி மலையாளம் போவோம்; மூத்தாளே வாடி முட்டிக் கொண்டு சாவோம்.
இளையாளைக் கிழவன் அரிக்கிறது போல.
இளையானே ஆயினும் மூத்தாளே ஆகும் மகன். 3635
- (பழமொழி நானூறு.)
இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.
இறகு இல்லாப் பறவைக்கு உட்கார ஒரு நாழிகை இல்லை.
இறகு முற்றிப் பறவை ஆனால் எல்லாம் தன் வயிற்றைத்தான் பார்க்கும்.
இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்; ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்.
இறங்கு துறையிலே நீச்சானால் ஏறு துறையிலே எப்படி? 3640
- (இறங்கும்போதே, ஏறு கரையில்.)
இறங்கு பொழுதிலே மருந்து குடி.
இறடுங்கால் இறடும்.
இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.