14
தமிழ்ப் பழமொழிகள்
- (ப-ம்.) போன்றதோர்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா?
- (அழுவணம்-மருதோன்றி. )
அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்.
- (அச்சி-ஓர் ஊர்: சுமத்ராவில் உள்ளது)
அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன். 195
அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல.
அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில்.
- (பாலக்காட்டு வழக்கு, அச்சி விட்டில் சங்கடம் வந்தால் பிராமணன் புறப்பட வேண்டும்.)
அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா?
- (ப-ம்.) தேர் ஓடுமா? பிள்ளை பிறக்குமா?
அச்சு இல்லாமல் தேர் ஓடாது. 200
- (பா-ம்.) ஓடுமா.
அச்சு ஒன்றா வேறா?
அசடு வழிகிறது.
அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல்.
அசந்தால் வசந்தா,
அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி. 205
அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே.
அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்.
- (ப-ம்.) வீட்டுப் பிராம்மணா.
அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்.
அசல் வாழ ஆறு மாசம் பட்டினி.
அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா? 210
அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை.