பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

163


ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன?

(இறந்து என்ன.)

ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன?

(இண்டஞ்செடி தாழ்ந்து என்ன? தழைத்து என்ன?)

ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான். 3785

ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ்.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

(உடைமையை, கொன்றை வேந்தன். இருபொருள்.ஈயார்-கொடுக்காதவர்; ஈ என்னும் பறவை, தேட்டை-சேமித்த பொருளை; சேமித்த தேனை. தீயார்-கெட்டவர்; நெருப்பை மூட்டுபவர்.)

ஈயார் பொருளுக்குத் தீயார்.

ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி.

(களை எடு, களை பிடுங்கு.)

ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. 3790

ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.

ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும்.

ஈர் உருவப் பேன் அகப்படும்.

(அகப்படுமா?)

ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல.

ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும். 3795

ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல,

ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான்.

(அறுக்கிறதா?)

ஈரத்தில் ஏரைப் பிடி.

ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான்.

ஈர நாவுக்கு எலும்பு இல்லை. 3800

ஈர நிலத்தில் ஏரைப் பிடி.

ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும்.

ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா?

(ஈயும் மொய்க்காது. ஈரம் உள்ள இடத்திலே.)

ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும்.


ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன? 3805

(ஈரம்-அன்பு.)