தமிழ்ப் பழமொழிகள்
163
ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன?
- (இறந்து என்ன.)
ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன?
- (இண்டஞ்செடி தாழ்ந்து என்ன? தழைத்து என்ன?)
ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான். 3785
ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
- (உடைமையை, கொன்றை வேந்தன். இருபொருள்.ஈயார்-கொடுக்காதவர்; ஈ என்னும் பறவை, தேட்டை-சேமித்த பொருளை; சேமித்த தேனை. தீயார்-கெட்டவர்; நெருப்பை மூட்டுபவர்.)
ஈயார் பொருளுக்குத் தீயார்.
ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி.
- (களை எடு, களை பிடுங்கு.)
ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. 3790
ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.
ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும்.
ஈர் உருவப் பேன் அகப்படும்.
- (அகப்படுமா?)
ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல.
ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும். 3795
ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல,
ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான்.
- (அறுக்கிறதா?)
ஈரத்தில் ஏரைப் பிடி.
ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான்.
ஈர நாவுக்கு எலும்பு இல்லை. 3800
ஈர நிலத்தில் ஏரைப் பிடி.
ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும்.
ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா?
- (ஈயும் மொய்க்காது. ஈரம் உள்ள இடத்திலே.)
ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும்.
ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன?
3805
- (ஈரம்-அன்பு.)