இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
165
ஈன்றோர் நஞ்சில் சான்றோர் இல்லை.
- (ஈன்றோரைவிட.)
ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.
ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ்.
ஈனரை அடுத்தால் மானம் அழியும்.
ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது. 3835
- (நக்கவும்.)
ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் கைக் கொள்வான்.
ஈனனுக்கு இரு செலவு.
ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.
ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம்.
- (காயாப் புழுங்கல், யாழ்ப்பாண வழக்கு.)