பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

177


உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்புஇராது.

(இல்லை.)

உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன? 4100

உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.

உப்பு இல்லாமல் கலக்கஞ்சி குடிப்பான்.

(பா-ம்.) ஒரு மிடாக் கஞ்சி

உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பு அருமை; அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை.

உப்பு உந்தியா செட்டியாரே என்றால் பப்பு உந்தி என்கிறார்.

(உந்தியா - இருக்கிறதா, - பப்பு - பருப்பு.)

உப்பு உள்ள பாண்டம் உடையும். 4105

உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமூம் எடுக்க வேண்டும்.

உப்புக் கட்டினால் உலகம் கட்டும்.

உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல.

(விழிக்கிறாள்.)

உப்புக்கு ஆகுமா, புளிக்கு ஆகுமா?

உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான். 4110

உப்புக்கும் உதவாத விஷயம்.

உப்புச் சட்டியும் வறை ஓடும் தோற்றுவிட்டான்.

உப்புச் சட்டியும் வறை ஓடும் விற்றுக்கடனைக் கொடுத்து விட்டான்.

உப்புச் சப்பு இல்லாத காரியம்

உப்புச் சமைந்தால் உப்பின் அருமை தெரியும்; அப்பன் சமைந்தால் அப்பன் அருமை தெரியும். 4115

(யாழ்ப்பாண வழக்கு.)

உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போச்சுது.

உப்புத் தண்ணீருக்கு விலாமிச்சவேர் வேண்டுமா?

உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.

உப்பு நளபாகமாய் இருக்கிறது.

உப்பு நீர் மேகம் உண்டால் உலகில் பிரவாகம். 4120

(பா-ம்.) சேர்ந்தால்

உப்புப் புளிக்கு ஆகாத சமாசாரம்,

உப்புப் பெறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம்.