தமிழ்ப் பழமொழிகள்
179
உபகாரம் வீண் போகாது.
உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும். 4150
உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம்.
- (வீட்டிலே.)
உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா?
- (எண்ணுகிறதா?)
உபசார வார்த்தை காசு ஆகுமா? உண்டால் ஒழியப் பசி தீருமா?
உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு.
உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம். 4155
உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான்.
உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி,
- (மீனாட்சி. காமாட்சி.)
உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ?
உமி குத்திக் கை நோகலாமோ? 4160
உமி குற்றிக் கை வருந்துமாறு
- (பழமொழி நானூறு.)
உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல.
உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை.
உமியைக் குத்திக் கை சலித்தது போல.
உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு. 4165
- (அயர்ந்த.)
உயர்ந்த காற்றைக் காற்று மோதும்.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா?
- (கருடன்.)
உயிர் அறியும் உறவு,
உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல.
உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார். 4170
உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம்.
- (உப்பு விற்றுப் பிழைக்கலாம், உண்ணலாம்.)
உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை,
உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா?