பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

187


உள் இருத்து கள்வன் உளவறிந்து செய்வான்.

உள் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் புண்ணுமாய் இருக்கிறான்.

உள் சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போல.

(ஈஷுவார் போல.)

உள் சுவர் இருக்கப் புறச்சுவர் மண் இட்டு, பிள்ளை பெற்றவள் இருக்கப் பீத்துணியை மோந்து பார்த்தாளாம்.

உள் சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று. 4350

உள் நாக்கும் தொண்டையும் அதிர அடித்தது போல.

உள் வீட்டிலே கீரையை வைத்துக்கொண்டு அயல் வீட்டுக்குப் போவானேன்?

உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் கெட்டவை.

உள்ள அன்றுக்கு ஓணம்; இல்லாத அன்றைக்கு ஏகாதசி.

உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும். 4355

உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய உழைத்தான்.

(ஆட உழைத்தான்.)

உள்ளங் காலில் முள்ளுத் தைக்காமல் இருக்க வேண்டும்.

உள்ளங்கை நெல்லிக் கனி போல.

உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கினது போல.

உள்ளங் கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்? 4360

(பூணுக்கு.)

உள்ளங்கையில் அஞ்சு கொண்டை முடிக்கிறேன்.

உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை.

உள்ளங்கையில் இட்டுப் புறங்கையை நக்குவதா?

உள்ளங்கையில் உப்பிட்டாரை உள்ளளவும் நினை.

உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல. 4365

உள்ளங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?

உள்ளங்கையில் ரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான்.

உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன்.

உள்ளத்தில் ஒன்றும் குறையாது, கள்ளம் இல்லா மனத்தார்க்கு.

உள்ளத்தில் கள்ளமும், உதட்டில் வெல்லமும். 4370

உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்.

உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம்.