பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

17


அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான்.

அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது.

அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி. 265

அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம்.

அஞ்சு வயசில் ஆதியை ஓது.

அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம்.

அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும்.

அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல். 270

அஞ்சு விரலும் சமமாக இருக்குமா?

(பா-ம்.) ஒரு மாதிரி.

அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.

அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; ஐங்கல அரிசி ஒரு கவளம்.

அஞ்சூரான் பஞ்சு போல.

(பா-ம்.) புஞ்சை போல.

அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும். 275

அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம்.

அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள்.

அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம்.

(பா-ம்.)பெட்டை.

அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல.

அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும். 280

(பா-ம்.) தொட்டதெல்லாம் நட்டம்.

அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது.

அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.

அட்டாதுட்டிக் கொள்ளித் தேள்.

அட்டாரைத் தொடாக் காலம் இல்லை.

(பழமொழி நானூறு)

அட்டாலும் பால் சுவையில் குன்றாது. (வாக்குண்டாம்.) 285

அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு.