188
தமிழ்ப் பழமொழிகள்
உள்ளதுக்குக் காலம் இல்லை.
உள்ளது குற்றம் ஒரு கோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ?
உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை. 4375
- (உழவினை.)
உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
உள்ளது போகாது; இல்லது வராது.
உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு!
- (உள்ளதும் கெட்டதடா.)
உள்ளதும் போச்சு, பிள்ளை பள்ளிக்கூடம் போய்.
உள்ளதைச் சொல்லி ஊரை விட்டு ஓடு. 4380
உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருஷன்.
உள்ளதை எல்லாம் விற்று உள்ளான் மீனைத் தின்று பார்.
உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்,
உள்ளதைச் சொல்லு; உலகத்தை வெல்லு. 4385
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பகை.
- (சொன்னால் ஊருக்குப் பொல்லாதவன்.)
உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்.
உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண் ஆகும்.
உள்ளதைச் சொன்னால் உறவு அற்றுப் போகும். 4390
உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை.
உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம்.
- (கண்ணனுக்கு.)
உள்ளதையும் கெடுத்தாள், உதறு காலி வந்து.
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
- (நொள்ளைக் கண்ணன்.)
உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு. 4395
உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான்.
உள்ளம் அறியாத கள்ளம் இல்லை.