பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தமிழ்ப் பழமொழிகள்


உள்ளூர் மேளம்.

உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான்.

உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அயலூரில் ஆனை பிடிக்கப் போகிறானாம். 4425

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் சென்று உடும்பு பிடிப்பானா?

உள்ளூரில் பூனை பிடிக்காதவன் அசலூரில் ஆனை பிடிப்பானா?

உன்ளூரில் விலைப்படாத மாடா வெளியூரில் விலைப்படும்?

உள்ளூருக்கு ஆனை, அயலூருக்குப் பூனை.

உள்ளூறக் கொட்டின தேளே, ஒரு மந்திரம் சொல்கிறேன் கேளே. 4430

உள்ளே இருக்கிற பூபம்மா, பிள்ளை வரம் கேளம்மா.

உள்ளே இருக்கும் சாமி உண்டைக்கட்டி, உண்டைக்கட்டி என்கிறது; வெளியிலே இருக்கும் சாமி தத்தியோன்னம். தத்தியோன்னம் என்கிறதாம்.

உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளம் இல்லா மனசுக்கு ஏன்?

உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?

உள்ளே பார்த்தால் ஓக்காளம்; வெளியே பார்த்தால் மேற்பூச்சு. 4435

(டம்பம்.)

உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்.

(கோலார் தங்க வயலில்.)

உள்ளே வயிறு எரிய, உதடு பழம் சொரிய.

உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?

உளவு இல்லாமல் களவு இல்லை.

(நடக்குமா?)

உளவு போல இருந்து குளவி போலக் கொட்டுகிறதா? 4440

உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே.

உளி எத்தனை? மலை எத்தனை?